Tuesday, April 23, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம்

மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டு தங்கள் தாலிக்கயிறையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். பலரும் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து விட்டு அம்மனின் ஆசி பெற்று வருவார்கள். சிலர் விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே ஒளிப்பரப்பு செய்து விடுவதால் போக முடியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்த்த திருப்தி! என்ன மின்துறை தான் மனது வைக்க வேண்டும்!

அன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சிவபெருமானுடன் இணைந்து வரும் கோலத்தையும் பார்க்க கூடும் கூட்டம் இருக்கே!!!

மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரம் ஆகஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். இடி மன்னர்களிடம் இருந்தும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களை பாதுக்காத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாக பவனி வர, விநாயகர், முருகன், பின்பு வரும் மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சகிதமாய் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு மனமுருகி வணங்க, அடுத்து, அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, அனைவரும் பயபக்தியுடன் இரு கைகூப்பி வணங்க, சர்வ அலங்கார அன்னையை பார்க்க எட்டி எட்டி பார்க்கும் கூட்டம், இன்னவென்று சொல்ல முடியாத பக்தி பரவசத்துடன் இருக்கும் கூட்டம், காண கண் கோடி வேண்டும்.


மெதுவாக அம்மனின் அழகுப் பூப்பல்லக்கு பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.

2 comments:

  1. Interesting song! I have heard this before but never seen this video till now. Thanks for sharing, Saravanan.

    ReplyDelete

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...