Friday, December 6, 2013

லதா புராணம் 29 - 68

முகநூல் புராணங்கள் :)

நீயா நானா-வில் விவாதிப்பதற்கு நல்ல விஷயங்கள் இல்லை போலிருக்கு!

ஆண்களுக்கு மீசை தேவையா ரேஞ்சில் போய்க்கிட்டு இருக்கு!

சிங்கம் பார்ட் -3 - சிங்கங்கள் அதிரி புதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க

மீசை அரசியல் பயங்கரமா இருக்கு!

வருங்காலத்தில் யாரும் நான் மீசை வச்ச ஆம்பளை-ன்னு மறந்தும் கூட டயலாக் சொல்ல முடியாது, எழுதவும் முடியாது

லதா புராணம் #30



நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி வைக்க நேற்றிலிருந்து ஒரே குழப்பம்!

பசிக்கிறது ஆனால் நேரத்தைப் பார்த்தால் மதிய நேரம் கூட இல்லை.

இப்படியே இரவும் வந்து சீக்கிரமே தூக்கமும் வந்து விட்டது.

விடிகாலையில் எப்பொழுதும் போல் எழுந்திருந்துப் பார்த்தால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது தூங்க ! ஹையா!!!!

வீட்டிலுள்ள கடிகாரங்களின் நேரத்தை சரி செய்து விட்டேன்.

ஆனால், உடல் கடிகாரம் தான் ஒத்துழைக்காமல் சதி செய்கிறது!

லதா புராணம் #31


பல நாட்கள் தீபாவளி விடுமுறையில் சென்றிருந்த சூரியனார் இனிப்புகள் உண்டு ஆனந்தத்தில் உள்ளேன் ஐயா என்று வசீகரிக்கவும் அவர் அழகில் மயங்கி வெளியில் வந்து பார்த்தவுடன் தான் அவருடைய விஷமம் புரிந்தது!!!

முகத்தில் அறைந்த குளிர்காற்று, அட லூசுப் பெண்ணே, பனிக்காலம் என்று மறந்தனையோ என்று சிரித்துக் கொண்டே சில்லிட கேட்கவும் தான் ...

நிஜத்திற்கு வந்தேன்

லதா புராணம் #32


இன்றும் வானத்தில் வசீகரா, Mr.Surya !

நேற்று வரை பச்சைப்பசேல் என்று இருந்த புல்வெளிகள் மாவு தெளித்தாற் போல் காலைப் பனியுடன்!

பூமாதேவி சொன்னாள் நம்பாதே, அந்தக் கள்ளனை

லதா புராணம் #33


என்ன தான் பளபள-ன்னு உடுத்தி,
தோள்ல பையை போட்டு
நகைக் கடைக்கு வந்தாலும்
அந்த இத்தூனுண்டு பர்ஸ்-க்கு
அடிச்சுக்குறவங்கள என்னன்னு சொல்றது ???

லதா புராணம் #34



உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே --TMS 'கணீர்' குரலில் உருகி,

கேட்பவரையும் உருக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாள் முழுவதும் முருகன் பாடல்கள் தான்

லதா புராணம் #35



பள்ளி நாட்களில் திருப்பள்ளியெழுச்சி என்பது எவ்வளவு கடினம் என்பதை

வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் உணர முடியும் .

அலாரம் வைக்காமலே எழுந்திருக்கும் இவர்கள்

அம்மாவிடம் வந்து எழுந்திரு என்றால், அதே ஐந்து நிமிட பல்லவியை அம்மா சொல்லும் போது மட்டும்

கடுப்பாவது ஏனோ?

லதா புராணம் #36



கையால் பிசைந்து உருட்டி சாப்பிடும் சுகம்

முள்கரண்டியில் நாசூக்காக சாப்பிடுவதில் இல்லை

லதா புராணம் #37



குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிற

குழைந்த சாதத்தில் நெய் விட்டு பருப்பு போட்டு மேலாக்க ரசம் ஊத்தி கமகம-ன்னு இருக்கிற

அந்த சாப்பாட்டில இருக்கிற ருசி வேற எதுலயுமே கிடையாது. யம் யம் யம் ...

மைண்ட் வாய்ஸ் - இப்படி டேஸ்ட் பார்த்தே குழந்தை ஒல்லியாவும் ஊட்டி விடுறவங்க குண்டாவும் ஆயிடறாங்க

லதா புராணம் #38



இஞ்சிப் பால் குடிக்காமலே

இடை மெலிந்து

ஒய்யார நடைபோட்ட

ஒல்லிக்குச்சி தேவதைகள்

ஒரே நாளில்

குண்டு பூசணிக்காயாய் ....

.
.
.

குளிர்கால அங்கிகளின் உபயம்

லதா புராணம் #40


கண்ணுக்குக் குளிர்ச்சியாய்

வண்ண ஓவியங்களாய்

வீதிகளை அலங்கரித்து

ஜொலித்தவள் ...

இலைகள் உதிர்ந்து

கிளைகள் விறைத்து

பொலிவிழந்து

கருவாச்சிக் காவியமாய் ...

லதா புராணம் #41


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு
வா வா என்று
சொல்ல மாட்டேன்
போக மாட்டேன் ...

என்று அடம் பிடித்து இலைகள் உதிர்ந்த மரங்களின் வழியே

என் முன்னே பவனி வருகிறார், Mr.Surya

லதா புராணம்#42


ஒரு ஹிந்திக்காரன் இன்னொரு ஹிந்திக்காரனைப் பார்த்தா ஹிந்தியில பேசிக்கிறான் .

ஒரு மல்லு இன்னொரு மல்லுவைப் பார்த்த மலையாளத்தில பறையறான்.

ஒரு தெலுகுக்காரான் இன்னொரு தெலுங்கனைப் பார்த்தா தெலுங்கில் மாட்லாடுறான்

சில கொம்பு மொளைச்ச தமிழர்கள் மட்டும்

தமிழ்-ல எப்படி இருக்கீங்க-னு கேட்டா , I am fine, How are you? -னு பீட்டர் விடறது.

ஏன் ஏன் ஏன் தமிழ் -ல பேசினா குறைஞ்சா போய்டுவீங்க ???

உங்களை எல்லாம் ...

லதா புராணம் #43
      


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

'ஆல்பனி' மலை மீது எதிரொலிக்கும்

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

லதா புராணம் #44



V வடிவில் குடும்பங்களாக பல வண்ணப் பறவைகள்

GPS இல்லாமலே

நகரம் விட்டு நகரம்

நாடு விட்டு நாடு

கண்டம் விட்டு கண்டம்

வானில் பறக்கும் காட்சி

சொல்லாமல் சொல்லும்

குளிர்காலம் வந்து விட்டது என்று ...

லதா புராணம் #45


நேற்றிரவு வாயு பகவானுக்கும்,

வருண பகவானுக்கும்

நடந்த யுத்த கலவரத்தைப் பார்த்து

இன்று காலை

அச்சத்தில் சூரிய பகவான்

லதா புராணம் #46


வருண பகவான், சூரிய பகவான், வாயு பகவான், அக்கினி பகவான் --சரி.

பனிக்கு எந்த பகவான்?

லதா புராணம் #47


அதிகாலையில் சூரியனைத் தேடினால்

அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக -னு

பாடலாம் அப்படி கருமேகங்களுக்கிடையில் பளிச்சென்று அழகு முகம் காட்டிச்

சந்திரன் காலை வணக்கம் சொல்ல

சூரிய விடியலுக்காக காத்திருக்கிறேன்

லதா புராணம் #48


நீல நிற வானில்

சிறகுகளை விரித்து

தனிக்காட்டு ராஜாவாய்

வலம் வரும்

உள்ளங்கவர் கள்வன்

ஆதித்யன் !

லதா புராணம் #49


அனைவரின் முகங்களிலும்
திருப்தியையும்,
மகிழ்ச்சியையும்
தரும் கிழமைகளில்
சிறப்புடையது

வெள்ளிக்கிழமை !!!

லதா புராணம் #50


சூடா டீ வேணும்-னு கேட்டு வாங்கி

ஊதி ஊதி ஆத்தி

குடிப்பதில் தான் சுகமே!!!

--இணையத்தில் படித்தது 


அம்மா எழுந்திரு

அம்மா பசிக்குது

லீவு நாட்களில் நான் கேட்கும்

சுப்ரபாதம் !







கரண்டியும் கையுமாகவே

காட்சி தருகிறேன் போல ...


லதா புராணம் #51


சில நாட்களுக்கு

கூட்டுக்குத் திரும்பி

தாய்ப் பறவையின்

சிறகுகளில் ...

லதா புராணம் #52


கண்ணைக் கூசவைக்கும்

சூரியன்

உப்பளமா என்று யோசிக்க வைக்கும்

பனிக்குவியல்

உடல் ஊடுருவ காத்திருக்கும்

கடுங்குளிர் ...


இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் :)


லதா புராணம் #53


புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது ...

லதா புராணம் #54
நித்தின் : இன்னைக்கு என்ன சட்னி, அம்மா?

நான்: வெங்காய சட்னி!!

நித்தின்: எது, எனக்கு ரொம்ப பிடிக்குமே, அதுவா???

நான்: ஆமா, அதே தான். அந்த மிக்ஸி-ய எடு.

நித்தின்: எங்கே இருக்கு?

நான்: அங்கே தாண்டா ...

நித்தின்: எங்கே??(அவன் கண் முன்னால் தான் இருந்தது )

நான்: டேய், அது தாண்டா, கண்ணு முன்னாடியே இருக்கு. தெரியலையா???

நித்தின்: oh !! Mom this is called blender in அமெரிக்கா. Dont say 'mixie ', okay ???

நான்: சுட்டுப் போட்டாலும் blender-னு வாயில வராது. நான் mixie-ன்னு சொன்னா நீ தான் அது blender-னு புரிஞ்சுக்கணும், சரியா ?

ஹ்ம்ம்...

அம்மைக்குப் பாடம் சொல்லும் சுப்பையா

லதா புராணம் #55
நேற்றிரவிலிருந்து தன் மனக்குமுறலை
கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது
வானம் !!!

லதா புராணம் #56
காலையில் இருந்தே

வெறிச்சென்றிருக்கிறது

வீடும், மனமும் ...

தென்றல் 'அவள்'

சென்று விட்டதாலோ???



லதா புராணம் #58
பலருக்கும் நாளைய ராசி - செலவு

என்று இருக்க வேண்டும்

Enjoy ThanksGiving week sale

லதா புராணம் # 59
புத்தம் புது காலை

பொன்னிற வேளை ...

வானில்

செங்கதிர்களை பரப்பி

ஆதவன்

லதா புராணம் #60
காலை தவத்தை

கலைத்தால்

கடும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்

காத்திருந்தார்கள் ...

கண்மணிகள்

லதா புராணம் #61
பேந்த பேந்த முழித்து,

காதலியிடம் காதலைச் சொல்ல முடியாமல்

வாய் வரை வந்து பின் மௌனியாகி ...

தவித்த தெத்துப்பல் மைக் மோகன், முரளி, இப்போ யார்?
.
.
மைண்ட் வாய்ஸ் - ஹிக்கும் ! ரொம்ப அவசியம்.

லதா புராணம் #62
 
மயக்கமாகவும்

கலக்கமாகவும்

குழப்பமாகவும்

இன்றைய கதிரவன் !

லதா புராணம் #63
அழகென்ற சொல்லுக்கு முருகா ...
.
.
.
.
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ...
.
.
.
.
மனிதன் சக்திக்கு எட்டாத உருவமே முருகா ...




--TMS தானும் உருகி நம்மையும் உருக வைக்கிறார் !!!



லதா புராணம் #64
கதிரவனைப் பார்த்து

காலை விடும் தூது ...

இன்று மதியத்திற்குப் பிறகு

வானில் வலம் வருவார் போல

லதா புராணம் #65
உலகிலேயே அதிக முறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் - வயித்து வலி

#பள்ளி குழந்தைகள்

படித்ததில் பிடித்தது

ஹி ஹி ஹி ஹி! நானும் அப்படித் தான் ஒரு காலத்தில் ...
மலையின் பின்னணியில்
'தக தக' தங்க
சூரிய உதயம் !

இனிய காலைக் காட்சி
இந்த பனிக் காலத்தில் !

அபிராமி, அபிராமி!!

லதா புராணம் #66
'சில்'லென்று

கன்னங்கள் சிவக்க

முத்தமிட்டுச் சென்றது

பனிக்கால குளிர் தென்றல்

லதா புராணம் #67
மழையா ?

பனியா ?

பனிமழையா ?

பட்டிமன்ற விவாதம்

'வான்' டிவி- யில்

லதா புராணம் #68
       
   
            

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...