Sunday, February 2, 2014

லதா புராணம் #126-150


முகநூல் புராணங்கள்
------------------------------

இன்னார்க்கு இன்னாரென 

இட்ட சிவன் செத்துடலை என 

பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்தது   

லதா புராணம் #126


காலையில் 

கண் விழிக்கு முன் 

எழுப்பினால் 

'மகாபாரத' யுத்தமே 

நடக்கும்! 

எச்சரிக்கை விடுத்து

தூங்கச் செல்கிறான்

என் செல்ல 'கும்பகர்ணன்'!

லதா புராணம் #127



வானில் மட்டுமா வெள்ளி முளைக்கும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நம் தலையிலும் தான் 

லதா புராணம் #128



ஊறப்போட்ட அரிசியை சாப்பிடாதே 

உன் கல்யாணத்தன்று மழை கொட்டும்

என சொன்னார்கள்.

அப்படி எல்லாம் நடக்கவே இல்லை 

பெரியவர்கள் சொன்னது பொய் என்று மீண்டும் நிரூபணம் 

லதா புராணம் #129



லதா புராணம் #129 மேம்படுத்தியது  


ஊறப்போட்ட அரிசியை சாப்பிடாதே

உன் கல்யாண நாளில் மழை கொட்டும்

என்றெல்லாம் மிரட்டினார்கள்.

நானும் பார்க்கிறேன்

இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட

அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.

இந்த பெரிசுகள் தாமும் ஏமாந்து

என்னையும் ஏமாற்றியிருக்கிறார்கள்.

ம்ம்ம்ம்ம்ம்

லதா புராணம் #129



போன மச்சான் திரும்பி வந்தான் கதையா

போலார் வொர்ட்டெக்ஸ் மீண்டும்...

லதா புராணம் #130



முன்பெல்லாம் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குப் மணப்பெண்ணை அழைத்துச் செல்லும் பொழுது 

மணப்பெண் அழுது கொண்டே பிரியாவிடை கேட்க, பெற்றவர்களும், உற்றார் உறவினர்களும் கலங்கிய கண்களுடன் வழியனுப்ப ...

சிறிது நேரம் அந்த சூழ்நிலையே சோக கீதம் இழைக்கும்.

பிறகு வந்த வருடங்களில் கொஞ்சம் அழுகுற மாதிரி நடிங்க பாஸ் என்று மாமா, அத்தைகள் கேலி செய்யும் அளவுக்கு மாறி விட்டது. 

ஹி ஹி ஹி !!!!

லதா புராணம் #131




மெல்ல திறந்தது கதவு படத்தில் வருகிற அமலா மாதிரி கண் மட்டும் தெரிய 

ஆல்பனியில் மனித நடமாட்டம் !

உபயம் - ஜனவரி மாத கடுங்குளிர் 

லதா புராணம் #132



பொண்ணு கொஞ்சம் துடுக்குத்தனமா பேசுவா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. 

அப்பா மாமனாரிடம் 

மாமனார் - அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. 'அவங்களே பார்த்துப்பாங்க' !!!

அவர் மகனைப் பத்தி ஒரு வார்த்தை, ம்ஹும் 


லதா புராணம் #133


மகள் 

தங்காள் 

அக்காள் 

இல்லாள் 

லதா புராணம் #134


அன்று

தவழ்ந்தாய் 

தீண்டினாய் 

வருடினாய்

தென்றலாக !


இன்றோ

சீண்டுகிறாய்

சீறுகிறாய்

அறைகிறாய்

கடுங்குளிர் காற்றாக !


லதா புராணம் #135


உனக்கு

கூட்டல் மட்டும் தான் தெரியும்

என முன்பே தெரியாமல் போனதே!

- எடை பார்க்கும் எந்திரம் 

லதா புராணம் #136


என் செல்ல கும்பகர்ணனின் 

'தவத்தை'

கலைக்க 

மனமில்லாமல் 

'கும்பகர்ணி' யானென்   

லதா புராணம் #137



பெற்றோர்கள் சொல்வதை 

மூத்த குழந்தைகளும் 

இளைய குழந்தைகள் சொல்வதை 

பெற்றோர்களும் 

கேட்கும் காலம் 

லதா புராணம் #138


சுதந்திர இந்தியாவில் 

குண்டு துளைக்கும் 

மேடையில் 

சுதந்திரமாக 

உரை 

ஆற்றும் நாள்

மீண்டும் வருமோ?


பெண்கள்

குழந்தைகள்

சுதந்திரமாக

பயமின்றி

வெளியில்

செல்லும் நாள்

என்று வருமோ?


நாட்டின் நலன்

ஒன்றையே

கருதி

நல்வழிப்படுத்தும்

அரசியல் தலைவர்கள்

மீண்டும் வருவாரோ?


ஜாதி, மத, இன

பாகுபாடின்றி

எல்லோரும்

இந்நாட்டு

மக்கள் என

கூடி மகிழ்ந்து

வாழும் நாள்

மீண்டும் வருமோ?




லதா புராணம் #139



பொங்கலுக்குப் பட்டு வேட்டி,சட்டை சகிதம்

பக்கத்து வீட்டு 'அண்ணாச்சி'யான கோபிநாத்

சூட் கோட் போட்டு 'சகோ.கோபிநாத்' ஆக தூரச் சென்று விட்டார்

-நீயா நானா??

லதா புராணம் #140



கலங்கிய கண்களும்

சிவந்த கன்னங்களும்...

நீ

அறைந்ததால் தானே?

- பனிக்குளிர் காற்று!

லதா புராணம் #141



அம்மா, அம்மா அழுது கொண்டே வந்த மகனை ஆதரவாய் அணைத்த அன்னை கேட்டாள்...

என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி தேம்பி தேம்பி அழறே ?

உன்னை யார் என்ன சொன்னாங்க? நீ ராஜா வீட்டு கன்னுகுட்டியாச்செ?

நீ சொல்லி குடுத்ததை தான் நான் சொன்னேன் ம்மா. ஆனா, ஆனா, அதை தப்பு -ன்னு சொல்லி ...

மக்கு-ன்னு எல்லாரும் கை கொட்டி சிரிக்கிறாங்கா ? அந்த வாத்தியார் என்னை எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டார் தெரியுமா?

மீண்டும் அழ ஆரம்பிக்க ...

என் செல்லம் -ல அழக்கூடாது, நல்ல பையன் -ல . அம்மா சொன்னா கேட்டுக்கணும் ...

யாரு மக்கு-ன்னு இவனுங்களுக்கு நாம காட்டுவோம்.

நீ போய் பீட்சாவும், ஐஸ்கிரீமும் சமர்த்தா சாப்பிடுவியாம்.

அம்மா போய் மக்கு-ன்னு சொன்னவங்களை 'ஆப்பு' வச்சிட்டு வருவேனாம். சரியா?

எங்கிட்டேயாவ ...என்று கோபத்துடன் அம்மா வெளியேற ...

'தலையாட்டி பொம்மை'யும் தலையை ஆட்டிக் கொண்டே வேடிக்கைப் பார்க்க ...

ஹையா, சோட்டா பீம் என்று டிவி பார்க்க ஓடினான் அந்த ...

எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா...  


http://www.youtube.com/watch?v=xB_eWW5ttaM


லதா புராணம் #142


கவிஞர் வைரமுத்து நியூயார்க்கில் இன்று இருந்திருந்தால் ...

காற்றே என் வாசல் வந்தாய்
விரைவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
போலர் வொர்ட்டெக்ஸ் என்றாய்...

என்று தான் எழுதியிருப்பார் !!!!

லதா புராணம் #143



என்ன, பெரிய ஹரிச்சந்திரன் -ன்னு நெனைப்பா?
-நானும், எடை பார்க்கும் எந்திரமும்  

லதா புராணம் #144


துணிக்கடை பொம்மை

உடுத்தியிருந்த சேலையில்

பொம்மை ஆனாள் அவள் !

லதா புராணம் #145


முயல் பாய்ச்சலில் ஏறும் விலையும்

ஆமை நடையில் இறங்கும்.

இது 'தங்க'த்திற்கு !


பவுண்டு பவுண்டாகா ஏறும் எடையும்

அவுன்சு அவுன்சாக இறங்கும்.

இதுவும் 'தங்க'த்திற்கே !

லதா புராணம் #146



சத்தமில்லா முத்தத்தில்

கன்னங்கள் சிவக்க

உறைந்து நின்றாள்

அவள் !

லதா புராணம் #147


லதா'ஸ் முதலாம் விதி
----------------------------------
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, வாய்க்கட்டுப்பாடு தேவை.

லதா'ஸ் இரண்டாம் விதி
------------------------------------
சாப்பாடு டைரக்ட்லி ப்ரோப்போர்ஷனல் டு வெயிட்டு.

லதா'ஸ் மூன்றாம் விதி
---------------------------------
ஒவ்வொரு இனிப்பு சாப்பிடும் போது இனிப்பின் எடையுடன் பிற எதிர் எடைகளும் கூடும்.

லதா புராணம் #148


தந்தைக்கும்

தனையனுக்கும்

இடையில்

'பஞ்சாயத்து தலைவி'யும்

ஆகிறாள்

தாய்!

லதா புராணம் #149



நொடி

முகநூல்

பயணம்

சடுதியில்

பரோட்டா

மரணம்

- தீஞ்ச பரோட்டா

லதா புராணம் #150

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...