Sunday, January 29, 2017

The Impossible (2012)


மூன்று குழந்தைகளுடன் கணவன், மனைவி செல்லும் விடுமுறைப் பயணம் தாய்லாந்தின் அழகான வெள்ளை மணல் கடற்கரையோரத்தில் என ஆரம்பமாகிறது இப்படம். சில நிமிடங்களில் பறவைகளின் அலறலில் கரையோர தென்னை மரங்கள் ஒவ்வொன்றும் நிமிடங்களில் சரிய, கடலில், நீச்சல் குளத்தில் இருந்த மக்கள் சூழ்நிலையை உணர்வதற்குள் சுனாமியால் கபளீகரம் செய்யப்பட்ட காட்சியை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இரு குழந்தைகளுடன் கணவர் ஒரு பக்கமும், மூத்த மகனும் அம்மாவும் மறுபக்கம் பிரிய, உடல் நிறைய காயங்களுடன் தப்பிக்க வழிதேடுகையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு காத்திருக்க, சேதாரமடைந்த அப்பகுதியில் உயிருக்குப் போராடுபவர்களை தேடி காப்பாற்றும் தாய்லாந்து மக்கள் இவர்களையும் காப்பாற்ற, மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நேரத்திலும் தன் மகனை அழைத்து அங்கிருப்பவர்களை உதவ்ச் சொல்வது, குழந்தைகளைத் தொலைத்த பெற்றோர்கள் அலைவது, அவசர சிகிச்சைப்பிரிவுகள் ஏனோ அன்றைய சுனாமி பாதித்த தமிழ்நாட்டையும் மக்களின் அழுகுரல்களும் டிவியில் கண்ட காட்சிகள் நினைவிற்கு வந்தது.

மறுபுறம் இரு குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு மனைவியையும் மகனையும் தேடி அலையும் அப்பா, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டடையும் இடம், அப்பாவுடன் சேரும் குழந்தைகள் ...சுனாமியன்று சென்னையில் பரிதவித்த குடும்பங்கள், மனைவி, குழந்தைகளை கல்பாக்கத்தில் தொலைத்த உறவுகளின் நினைவுகளில் மனம் கனத்துப் போனது.

வாழ்க்கை தரும் எதிர்பாரா முடிவுகளையும் இழப்புகளையும் யார் தான் அறிவர்?

2012ல் வெளிவந்த இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்த படமாம். சுனாமி காட்சிகளை எடுத்த விதம் ரியலி இம்பாஸிபிள்!








No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...