Monday, June 2, 2014

இது ஒரு பூரியின் கதை ...

பூரி கிழங்கு மசால், பூரி தால், பூரி சன்னா மசாலா இதனுடன் தயிர் வெங்காயம் சாப்பிட்டிருக்கிறேன். புதிதாக தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள் மதுரையில்! இப்படி பூரி கண்ட இடமே சொர்க்கம் என்றிருந்த எனக்கு நண்பர் அனுப்பிய ஒரு பதிவில் பூரியுடன் பாஸந்தி காம்பினேஷன் மட்டும் ட்ரை செய்யவில்லை என்று தோன்றுகிறது. பாஸந்தி எனக்குப் பிடித்த இனிப்பும் கூட! (எனக்குப் பிடிக்காத இனிப்பு எது-ன்னு யோசிக்கணும் )
எதற்கும் மதுரை டெல்லிவாலாவில் கிடைக்கிறதா என்று கேட்டுக்க வேண்டியது தான் *:) happy

சிறுவயதில் அம்மா சுவையான வெண்பொங்கல், அரிசி கஞ்சி (கென்னி பேஸ் ) பண்ணும் போதெல்லாம் எனக்கு பிடிக்கலை, வாந்தி வருது என்று அடம் பிடித்து உட்லண்ட்ஸ் ஹோட்டல் பூரி மசால் தான் வேணும் என கேட்டு சுவைத்து சாப்பிட்டிருக்கிறேன்.

தெற்குமாசி வீதி, மேலமாசிவீதி ஆரியபவன் போனால் எப்படா உப்பிய மொறுமொறு கோதுமை பூரி இத்தூனுண்டு கப்பில் தயிர் வெங்காயம் வரும் என்று ஆவலுடன் காத்திருந்து அவர்கள் கொடுக்கும் மல்லி, மிளகாய்த்தூள், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து செய்த புளிப்பான மசாலா குழம்புடன் பூரி சாப்பிட ...ம்ம்ம். திவ்யம் திவ்யம்!!! சாப்பிட்டு முடித்த பிறகும் அந்த மாசலா வாசத்துடன் கை மணக்கும்  *:) happy

வீட்டில் அம்மா பூரி செய்ய ஆரம்பித்தால் நான் உருண்டை பிடிப்பேன், நான் தான் தட்டுவேன் என்று வட்ட வடிவம் தவிர உலக வரைபடங்கள் அனைத்தும் வரும் எங்களுக்கு. அம்மாவோ லாவகமாக கையால் அப்படி இப்படி செய்து தட்டி விடுவார்.

அம்மா, அப்பா, பாட்டி, அக்கா , தங்கை, தம்பிகள் ஐவரும் சேர்ந்து பாசிப்பருப்பு தாலுடன் பூரியை உண்ட நாட்கள் எல்லாம் ...இனி ஒரு காலம் வர வேண்டும்! மீந்த பூரியை அடுத்த நாள் ஜீனி தொட்டுச் சாப்பிட எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடக்கும்.

திருமணத்திற்குப் பிறகு நானும், கணவரும் சேர்ந்து பேசிக்கொண்டே உருளைக்கிழங்கு மசாலுடன் அனைத்து பூரியும் தீரும் வரை சாப்பிட்ட ஞாயிறுக்கிழமை காலைகள் ...

மதுரையில் கணேஷ் பவனில் உருளைக்கிழங்கு மசாலாவிற்காகவே பல நாட்கள் அங்கு இரவுச் சாப்பாடாக ...

இன்றும் நியூஜெர்சி , கனடா சரவண பவனில் அதே அதே!





சென்ற முறை சென்னை சரவணபவனில் ஆரம்பித்து, கும்பகோணம், மதுரை என்று போன இடங்களில் எல்லாம் தவறாமல் சுவைத்த பூரியின் சுவை இன்னும் ....

ம்ம்ம்ம்ம் !!!

காலங்கள் மாறினாலும் பூரியின் சுவை மட்டும் மாறவே இல்லை. பூரியின் மீதான ஆசையும் குறையவில்லை!!!

இந்த பூரி பதிவிற்கு காரணமான லிங்க் படித்து இன்புறுங்கள் *:) happy


http://writersamas.blogspot.in/2013/04/blog-post.html





















































AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...