உலகின் மிக அற்புதமான இயற்கை இடங்களில் ஒன்றான Iguazú National Parkல்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. இது அர்ஜென்டினா-பிரேசில் எல்லையில் இருக்கிறதாம். கூகிளாண்டவர் சொன்னார். கதைக்களமே ஒரு கதாபாத்திரமாக வலம் வருவதால் காட்சிகள் மிகவும் இயல்பாக அமைந்திருந்தன.
சில படங்களைப் பார்க்க, பார்க்கப் பிடிக்கும். சில படங்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். கதையும், மாந்தர்களும், களமும் நன்கு அமைந்து விட்டால் அது நல்ல படமாக அமைந்து விடும். இந்தப்படமும் அந்த வரிசையில் தான் சேரும்.
அருவியின் பேரிரைச்சல் கதாபாத்திரங்களின் மனஓட்டத்தையும், மூடுபனி குழப்பத்தையும், அடர்ந்த காடுகள் தனிமையையும் பிரதிபலிப்பதைப் போல இருந்தது. கண்களில் அன்பையும், பாசத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் காட்டும் போரிஸ் கதாபாத்திரம் மிக அருமை. அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பெண்மணியின் நடிப்பும் அருமை.
வசனங்களை விட, அமைதியாக கடந்து செல்லும் இடங்கள் உணர்வுகளை அழகாகக் கடத்திச்சென்றது சிறப்பு. முடிவு எதிர்பாராத ஒன்று!
பார்த்து ரசிக்கலாம்.
பார்த்து ரசிக்கலாம்.