Saturday, November 11, 2017

Happy Veterans Day

ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களை கௌரவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் நவம்பர் 11ம் தேதியை ராணுவ வீரர்களுக்கான தினமாக அறிவித்துள்ளது. மாநகரங்களில் கொடியேந்தி சீருடையணிந்த படை வீரர்களின் ஊர்வலம் பள்ளிக்குழந்தைகளின் வாத்திய அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெறும் நாளிது.

நாட்டின் மேல் பற்றுக்கொண்டவர்கள், மேற்படிப்பு படிக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் சேர்பவர்கள், பள்ளி முடிந்தவுடன் விரும்பிச் சேர்பவர்கள் என்று பலரும் ராணுவத்தில் சேர்ந்து கடும் பயிற்சிக்குப் பிறகு போருக்குச் செல்கிறார்கள். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அதிக அளவில் படை வீரர்களை ராணுவத்துறை தேர்வு செய்து கொண்டிருக்கிறது.சமீபத்திய ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்களில் வீரர்கள் பலரும் இறந்து போகும் சம்பவங்களால் பெற்றோரை, இளம் மனைவியரை, குழந்தைகளைப் பிரிந்து போருக்குச் செல்லும் படை வீரர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதும், உயிருடன் திரும்புவது உத்தரவாதமில்லாத நிலையில் அவர்கள் வீடு வந்து சேரும் நாள் வரை அக்குடும்பங்களின் தவிப்பும், வீடு வந்து சேர்ந்தாலும் போரில் ஏற்பட்ட அனுபவங்களில் மனச்சிதைவுக்கு ஆளாகி போதை மருந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வீரர்கள் பலரும் அல்லலுறுவதும் கண்ணெதிரே நடைபெற்றுக்கொண்டு தானிருக்கிறது.

தத்தம் வாழ்க்கையை மட்டுமே நினைத்துக் கொண்டும் தம் பிரச்சனைகளையே உலகளாவிய பிரச்சனைகளாக எண்ணிக் கொண்டும் வாழ்பவர்கள் ஒரு நிமிடமேனும் கொடுமையான சூழலில் எதிரிநாட்டில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் குடும்பங்களை நினைத்துக் கொண்டால் பிரச்னைகள் பலவும் குறையும்.

கடும்பனியிலும், குளிரிலும்,வெயிலிலும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் ராணுவ வீரர்களின் தியாகத்தால் நாட்டில் நிம்மதியாக சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்து நன்றியுடன் நினைவுகூறுவோம். குழந்தைகளுக்கும் வீரர்களின் தியாகத்தைப் போதிக்க வேண்டும். அதுவே அவ்வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை! நம் கடமையும் கூட.

Happy Veterans Day!


























No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...