Sunday, April 15, 2018

விட்டு விலகி...

100 நாட்கள் முகநூலை விட்டு விலகியிருப்பது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் பிறகு பழகி விடுகிறது. வெறுப்பரசியல், காழ்ப்புடன் பகிரப்படும் உண்மையற்ற தகவல்கள், வெளிவேஷ மனிதர்களின் பொய் பேச்சுகள், கண்ணில் படும் தகவல்களையெல்லாம் படித்து அல்லாடாமல் மனம் அமைதியாக, விட்டு விலகி இருத்தலும் அவசியமாகிறது.
இது தொடர வேண்டுமென்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பதிவிடும் நண்பர்களின் பதிவுகளைப் படிக்காமல் கடந்து விடுதலே நலம் என்ற முடிவே நல்லது.
மன நிம்மதி முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் சமூக வலைதளங்களிலருந்து ஒதுங்கி இருப்பதே நன்று. அதே நேரத்தில் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும் உண்டு. நல்ல மனிதர்களின் அறிமுகம், சிலரின் அறிமுகத்தால் தெரிய வரும் அரும்பெரும் தகவல்கள், புத்தகங்களின் அறிமுகம் என அவரவர் ரசனைகளும் ஆர்வங்களும் தொடர ஒரு நல்வாய்ப்பு உருவாவதால் இக்காலத்தில் வாழ்வின் அங்கமாகி விட்ட சமூக வலைதளங்களலிருந்து முற்றிலும் விடைபெறுவது சாத்தியமற்றுப் போகிறது.
என்னைப் பொறுத்தவரை முகநூலென்பது பொழுது போக்கவும் முடிந்தால் ஏதாவது நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் மட்டுமே. அதனால் விலகிடலும் எளிதாகிறது.
உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க, சீராக அதன் பணிகளைச் செய்ய விரதம் இருப்பது போல், மனதிற்கும் தேவை இத்தகைய முகநூல் விரதம்.(எனக்கு).
இங்கு வாராதிருந்த நாட்களில் தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும், நலமா என அக்கறையுடன் கேட்டுக் கொண்டவர்களுக்கும் என் நன்றிகள்.
அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🙂🙂🙂
அன்பே சிவம்ம்ம்🙂

No comments:

Post a Comment

'கனெக்ஷன்ஸ்' விளையாட்டு

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 'Wordle' என்ற விளையாட்டை 2022ல் அறிமுகப்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களிடையே அது மிகவும் ...