Friday, September 22, 2023

இதுதான் கருத்துச் சுதந்திரமா?

அடடா! ஏதோ நல்ல விஷயமா இருக்கும் போலிருக்கே என்று வாசிக்க ஆரம்பித்தேன். 'கடைசி விவசாயி' என்றொரு படம் வந்திருக்கிறது என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த வலைதளப்பதிவின் ஆசிரியர் நல்ல நோக்கத்தோடு படத்தையும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமையையும் சொல்லிக் கொண்டு வரும் வேளையில் அப்படியே 'ஜெயமோகர்' ஆகிவிடுகிறார்.

அதாவது,போராட்டம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக இதாண்டா சாக்கு என்று கடைகளைப் போட்டு அடிப்பார்களே! அப்படித்தான். சவுக்குசங்கருக்கும் இவருக்கும் என்ன விரோதமா? சரி, அவர் செய்யும் அரசியல் பிடிக்காது போலிருக்கு என்று நினைக்கலாம். கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரியை தாக்கி தன்னுடைய மனவிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த நல்லவர்.

என்ன செய்வது? நமக்கு வாய்த்ததெல்லாம் நடுநிலை என்பதே என்னவென்று அறியாத மனநலம் குன்றிய இலக்கியவியாதிகள். சமூக கேடுகளைக் கேள்வி கேட்க பிராமணனை மட்டுமே பிராண்டும் அறிவிலிகள்.

இப்படித்தான் இலக்கியவாந்தி எடுக்கும் பலரும் இன்றைய தமிழுலகத்தில் ஆளும் கட்சிக்குச் சார்பாக 'சனாதனத்தை ஒழிக்க' முயலும் கூட்டத்துக்கு விளக்குத்தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். அதே சாக்கில், மனம் போன போக்கில், மனஅடுக்குகளில் ஒளிந்திருக்கும் அழுக்குகளை வாந்தி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். வட இந்தியர்களைத் திட்டுகிறார்கள். பிராமணர்களை வசைபாடுகிறார்கள். மறந்தும் கூட மாற்று மதத்தின் மூட நம்பிக்கைகளை மட்டும் கேள்விகேட்டுவிட மாட்டார்கள் இந்த அறிவுஜீவிகள்! எல்லாம் எதற்காக? ஆளும் கட்சியின் கருணைப்பார்வைக்காக. எச்சில் சோற்றுக்காக. எண் சாண் வயிற்றைக் கழுவ இந்த நாதாரிப் பிழைப்பு. தான் சொல்வதைக் கேட்க தலையாட்டி கூட்டம் இருக்கிறது என்ற இறுமாப்பு. இந்த வேலையைச் செய்வதற்கு..... கருமம்டா! உங்களையெல்லாம் இன்னுமா இந்த உலகம் நம்புது😡
 
தமிழகத்தில் ஒழிக்க வேண்டிய எத்தனையோ சாதீய, சமூக பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. அதைப் பற்றி என்றாவது வாயைத் திறந்திருக்குமா இந்த மூடர்கூடம்? எப்பேர்ப்பட்ட தைரியசாலிகள். 'செலெக்ட்டிவ் அம்னீஷியா' நோயாளிகள். இது தான் கருத்துச் சுதந்திரமா? ச்சை👿

No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...