மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வினை விறுவிறுப்பாக படமெடுத்திருக்கிறார்கள். காலத்திற்கேற்றவாறு வண்டிகள், நடிப்பவர்கள் உடைகள், ஆடைகள், தோரணைகள் என்று எப்படித்தான் பீரியட் படங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்கள் தொடங்கி சுவர் அலங்காரங்கள், அலுவலகங்களில் இருக்கும் தொலைபேசிகள் என்று சின்னசின்ன விஷயங்களில் கூட அத்தனை கவனம் செலுத்தியிருந்தார்கள். ஹாலிவுட் பீரியட் படங்களை மிஞ்சவே முடியாது என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. செய்தித்தொடர்பு வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலத்தில் உளவுத்துறை எப்படி எல்லாம்செயல்பட்டிருக்கும் என்று நினைத்தாலே பதட்டமாகத் தான் இருக்கிறது!
ரஷியா என்றாலே 'KGB' என்பதும் அதன் கொடுரமான தண்டனைகளும் நினைவிற்கு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவிற்கிடையே நடக்கும் செய்திப் பரிமாற்றங்கள். எப்படி சாத்தியாமாகிறது? நம்மைப் போல மனிதர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். எப்படி படம் முடியுமோ என்று ஒவ்வொரு காட்சியையும் அதனோடு இழைந்து வரும் இசையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. ஒரு நிமிடம் கூட கவனத்தைச் சிதற விடாமல் பார்க்க வைக்கும் படம். நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். அனாவசிய காட்சிகள் இன்றி அழகாக கொண்டு சென்றது சிறப்பு.
ரஷ்யாவில் உயர் பதவியில் இருக்கும் நல்ல மனிதர் அவருடைய கனவு நகரத்தில் வாழ முடிந்தததா? இங்கிலாந்து தொழிலதிபர் KGBயிடம் மாட்டினாரா? இவர்களை இங்கிலாந்து, அமெரிக்க உளவுத்துறைகள் எவ்விதம் கையாண்டன என்று பதைபதைப்புடன் அருமையாக எடுத்திருந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல படம்.
"The Courier" அமேசான் பிரைமில் காண கிடைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?
கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா? – சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026 “உள்ளங்கையில் உலகம். நுனிவி...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
No comments:
Post a Comment