Thursday, October 11, 2018

உலக பெண் குழந்தைகள் தினம்


இன்று உலக பெண் குழந்தைகள் தினம். 

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை களைந்தெறிவதும், பாதுகாப்பான சமத்துவ சூழலை உருவாக்குவதும், அதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் தீர்வுகளைப்  பேசும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முன் எப்போதையும் விட பெண்கள் பற்றியும், பெண் குழந்தைகள் பற்றியும் இப்போது பேச வேண்டியது அவசியமாகிறது. இன்றளவும் பெண்களை போகப் பொருளாக , உடமையாகப்  பார்ப்பதும், அவர்களுக்கான உரிமைகளை முடக்குவது என எல்லா வகையிலும் பெண்களுக்கான சவால்கள் குறைவதாக இல்லை. கல்வி, வேலை மற்றும் பொருளாதார ரீதியாக சமத்துவம் பெற்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஒவ்வொரும் பெண்ணும்  இங்கே கடும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 

பெண்களால் போராட முடிகிறது. அதற்கான வாய்ப்புகள், தளங்கள் இருக்கிறது. போராடுகிறார்கள். ஆனால் குழந்தைகள்?

இந்தியச் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டால், சமீப நாட்களில் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் பதைபதைக்க வைக்கிறது. தீர்வுகள் வெளியில் இருந்து வருவது இல்லை. நாம் நம்மிடையே உருவாக்க வேண்டியது. எனவே இதையெல்லாம் வெளிப்படையாக பேசுவது அவசியமாகிறது.  அதற்கான சூழலை உருவாக்கிட நாம் ஒவ்வொருவரும் முன் வருவது அவசியம்.

சமீப நாட்களில் ட்விட்டரில் ”#metoo” என்கிற தளத்தில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி இந்தியப் பெண்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்லதொரு துவக்கம். யார் குற்றவாளி என்பதைப் பற்றி பேசுவதை விட இனி எவரும் பெண்கள் மீது இது போல அத்துமீறல்களைச் செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்கிற செய்தியை அனைவரும் உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த திசையில் நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

ஆணோ, பெண்ணோ குழந்தைகளைப்  போற்றுவோம், பாதுகாப்போம். கொண்டாடுவோம். 


No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...