Saturday, October 27, 2018

வரும் முன் காப்போம்...

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு” மாதமாக அனுசரிக்கின்றனர்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், நோயிலிருந்து மீளும் வழிவகைகள் அது பற்றிய கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனக்கள் நாடு முழுவதும் இந்த மாதத்தில் நடத்ததுகின்றனர். 

மார்பக திசுக்கள் பால் சுரப்பிகள், பால் குழாய்கள் கொழுப்பு மற்றும் அடர் திசுக்களால் ஆனது. அடர்ந்த மார்பக திசுக்களை கொண்ட பெண்களுக்கு கொழுப்பு திசுக்களை விட அடர் திசுக்கள் அதிகமாக இருப்பதும் அதனை மேமோகிராமில் கண்டறிந்தவுடன் அல்ட்ராசவுண்ட், MRI பரிசோதனைகளில் புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் நோயின் தீவிரத்திலிருந்து காப்பாற்ற உதவும். வயதான பெண்களுக்கு அதுவும் மாதவிடாயின் இறுதிக்காலத்தை நெருங்கும் 66 சதவிகித பெண்களுக்கும் மாதவிடாய் முற்றிலும் நின்ற 25 சதவிகித பெண்களுக்கும் இப்பிரச்னை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 

சமீபத்திய மாத இதழ் ஒன்றில் படித்தறிந்த தகவல் இது -எட்டுப் பெண்களில் ஒருவருக்கு அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். அமெரிக்காவில் வருடாந்திர உடற்பரிசோதனையின் போது பெண்களுக்கு அதுவும் நாற்பது வயது மேற்பட்டோருக்கு மேமோகிராம் பரிசோதனை கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, மாதாந்திர மார்பக பரிசோதனை, வருடாந்திர மேமோகிராம் பரிசோதனை, புற்று நோய் வரலாறு ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நான்சி என்ற பெண்மணியின் சமீபத்திய மேமோகிராம் பரிசோதனையில் மார்பக புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளார். தனக்கு எப்படி வந்தது என்று திகைத்தவருக்கு கிடைத்த தகவல் மேமோகிராம் பரிசோதனையில் இனம் கண்டு கொள்ள முடியாத கான்சர் திசுக்களுக்கு அவருடைய அடர் மார்பக திசுக்களே புற்று நோய்க்கான காரணம் என்றும் கூறியுள்ளார்கள். 

இந்தியச் சூழலில் மார்பகப்புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதிக பொருட்செலவுகள் கொண்ட இம்மருத்துவ பரிசோதனைகள் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இதுபோல பெருகி வரும் புது நோய்களுக்காகவாது மருத்துவ காப்பீடுகள் என்பது அவசியமாகிறது. 

என்னுடைய நண்பர்கள் பலரும் மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருப்பினும் சிலருக்கு நோயின் தீவிரம் மற்றும் பாதிப்பு அதிகமாகமாய் இருந்தால் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது என்பதால் பெண்கள் ஆரம்பநிலை பரிசோதனைகளின் மூலம் தங்கள் உடல்நிலையை கண்காணித்துக் கொள்வதே, நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது. 

வரும் முன் காப்போம்!

No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...