Monday, January 23, 2023

திருடர்கள் ஜாக்கிரதை


கடந்த வாரம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஈமெயில் முகவரியிலிருந்து என்னுடைய யாஹூ முகவரிக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது. 

Good morning, touching base to see if you're available via email.
I need a little favor. Thanks

XXXXXX
நானும் என்னவோ ஏதோ என்று உடனே இதற்குப் பதிலளித்தேன். உடனே மற்றுமொரு ஈமெயில் அவரிடம் இருந்து வந்தது.

I need to get Amazon gift card for my niece, it's her birthday but I can't do this now because I'm currently traveling. Can you get it from any store around you? Or help order on Amazon. I'll pay back as soon as I am back. Kindly let me know if you can handle this.

XXXXXX

இங்கே தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவருக்குத் தெரிந்த மனிதர்கள் நூற்றுக்கணக்கில் இருக்க ஏன் என்னிடம் கேட்கிறார் என்று. நிமிடத்தில் அவருக்குத் தொலைபேசி இருந்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் "அப்படியா? எப்படி அனுப்புறது?"ன்னு அவரிடம் நான் திருப்பிக் கேட்டு ஈமெயில் அனுப்ப,

Thanks. What I need is $300 Amazon gift card ($100 denomination. Three $100 cards total $300). You can buy from Walmart, Walgreens, Target or any grocery stores. Also, I need you to scratch the back of the cards to reveal the pins, then take a snapshot of the back showing the pins and have them sent to me here so I can forward it to her. I'll get the actual cards later.

XXXXXX
என்று அனுப்பவும் "நானும் கடைக்குப் போக முடியாது. சாரி" என்று சொல்லி முடித்தேன். சந்தேகம் வலுத்தது இங்கு தான். அதற்குப் பிறகு எங்களுடைய சிறுகுழுவில் இதைப் பற்றிக் கேட்ட பொழுது ஒருவர் கடைக்குச் சென்று கார்டு வாங்கி அந்த எண்களையும் கொடுத்திருக்கிறார். இது 'ஆன்லைன் திருட்டுத்தனம்' என்று தெரிந்தவுடன் அவருடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த திருட்டுத் தகவலைத் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இப்படி ஒரு நண்பரின் ஈமெயில் முகவரியிலிருந்து அவருடைய தொடர்புகள் அனைவருக்கும் சென்றுள்ளது பின்பு தெரியவந்தது. இது நடந்த சில மணிநேரங்களில் வேறொருவர் முகவரியிலிருந்து கிஃப்ட் கார்டு வேண்டி அதே ஈமெயில். ஒன்று தெரிந்தது. யாரோ தெரிந்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும். இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. இந்திய மக்கள் குழுவின் ஈமெயில் முகவரிகளை குழுவில் இருக்கும் திருடன் எவனோ யாருக்கோ விற்றுக் கொண்டிருக்கிறான். விஷயம் இதுவல்ல.

இணையத்தில் இன்று நாம் அனைவரும் புழங்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் கிடைக்கிறது. நம்முடைய இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் பலர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிஜம். நாம் இணையத்தில் தேடுவது, பேசுவது என்று ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறது நம்முடைய செல்போன்களும், கணினியும், தொலைக்காட்சிப்பெட்டியும், அலெக்ஸாக்களும். ஏதோ நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் ஓரளவிற்குத் தான். திருடர்கள் நினைத்தால் நொடியில் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடி நம் பணத்தையும் அடையாளத்தையும் அபகரிக்க முடியும். தற்போதைய நூதன இணைய திருடர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. அது நம் கடமையும் கூட. வீட்டிற்கு கதவு என்பது போல சில தடுப்புமுறைகளால் ஓரளவிற்கு நாம் இணைய உலகில் பாதுகாப்பாக இருக்க முடியும்.

நமக்குத் தெரியாத ஈமெயில் முகவரி அல்லது சந்தேகப்படும்படியான பெயர்களைக் கொண்டிருக்கும் முகவரியிலிருந்தோ, இதை 'க்ளிக்' செய்யுங்கள் என்று இருந்தாலோ, தனிப்பட்ட தகவல்களைக் கேட்டிருந்தாலோ 'scam' என்று குறித்து வைத்துக் கொள்ளும் வசதிகள் ஈமெயிலில் கிடைக்கிறது. அதைச் செய்து விட வேண்டும். செல்போன்களில் தெரியாத என்னிடம் இருந்து அழைப்புகள் வந்தால் பதில் அளிக்காமல் இருப்பது நல்லது. அப்படியே வேண்டுமென்றால் குறுஞ்செய்தியோ அனுப்புவார்கள். தொடர்ந்து அத்தகைய எண்களில் இருந்து அழைப்பு வந்தால் 'block' செய்து விடவேண்டும்.

You can register your numbers on the national Do Not Call list at no cost by calling 1-888-382-1222 (voice) or 1-866-290-4236 (TTY). You must call from the phone number you wish to register. You can also register at add your personal wireless phone number to the national Do-Not-Call list donotcall.gov.
இது அமெரிக்காவில் சாத்தியம். பதிவு செய்வது நல்லது.

நம்முடைய கணினி, செல்போன் இவற்றை மேம்படுத்தும் மென்பொருள்களை (சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்) உடனுக்குடன் செய்ய வேண்டும். எண்கள், சின்னங்களுடன் நீண்ட கடவுச்சொற்களை( குறைந்தது 12 எழுத்துகள்) வைத்துக் கொள்வது நல்லது. ஒரே கடவுச்சொல்லை அனைத்துக்கும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. மறக்க நேர்ந்தால் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதிகள் கைப்பேசிகளில் அல்லது நம்பகத்தகுந்த இணையதளங்களில் கிடைக்கிறது. இல்லையென்றால் எங்காவது எழுதி வைத்துக்கொள்ளலாம். எளிதில் யாருக்கும் கிடைக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை தகவல்களைச் சரிபார்ப்பதற்கும் வசதிகள் வந்துவிட்டது. '2-factor authenticatio' என்று அழைக்கப்படும் முறையைப் பயன்படுத்துவதால் திருடர்களிடமிருந்து நம் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொது இடங்களில் WiFi பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு தான் இணைய திருடர்கள் எளிதில் நம் தகவல்களைச் சுருட்டுகிறார்கள். அவ்வப்பொழுது நம் தகவல்களை backup செய்து கொள்வதும் நல்லது.

இவையெல்லாம் சிறு முயற்சிகள் தான். கண்டிப்பாக செய்ய வேண்டியது. இந்த வாரம் இது தொடர்பான விழிப்புணர்வு வாரம். ஏதோ என்னாலானது😎 


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...