Monday, July 22, 2024

நீயாநானா?

கஷ்டப்படும் நிலையிலிருந்து உயர, கல்வி ஒன்றே உதவும். சுக, துக்கங்களை மறந்து உழைக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்காத படிப்பை அடுத்த தலைமுறையாவது பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அதை உணர்ந்த மாணவ, மாணவியர் நன்கு படித்து மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வார நீயாநானாவில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வைத்து நடந்த விவாதத்தில் 

கோட்டுசூட்டு கோபி கேட்க மறந்தது:

ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதை அரசு நிறுத்தியது?

நீட் தேர்வினால் எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதைப் பற்றி மாணவர்களுடன் மேலும் பேசாமல் இருந்தது.

எப்படியெல்லாம் அரசியல் செய்கிறது நீயாநானா?

ஆனால் ஒன்று, பல மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உதவுவது பாராட்டப்பட வேண்டியது. கல்விக்கட்டணம் முதல் லேப்டாப் வரை கொடுத்து உதவும் அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.
எச்சக்கையால சாப்பாட்டை எச்சை ஆக்கத் தெரிந்தவர்களுக்கு ஏழை மாணவர்களின் வலிகள் புரிவதில்லை. தகுதி பார்த்து உரிமைத்தொகை அரசியல் செய்தவர்கள் தேவைப்படும் இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கலாமே?
 
இதே எதிர்கட்சியாக இருந்திருந்தால் அவியல் செய்திருப்பார்கள் தானே? மிக்சர் தின்று கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் எதைப்பற்றியும் கவலை இல்லை.

ஆக…

No comments:

Post a Comment

சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?

சொல்வனம் இதழ் - 338ல் வெளிவந்த என்னுடைய கட்டுரை  சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?  அமெரிக்க அரசின் ப...