Wednesday, February 19, 2014

லதா புராணம் - 151 - 175

என் முகநூல் பக்கங்களில் இருந்து...

வழி மேல்

விழி வைத்து

உன் வரவுக்கு

காத்திருந்தேன்.

உன் பாதம்

நிலம் படாமல்

உனைத் தாங்கி

நின்றேன்.

நீயோ,

வேறொருவனைக்

கண்டதும்

எனை

மறந்து

விட்டாயே?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

-செருப்பு

லதா புராணம் #151



பின்னணியில் நீல வானம்

மலை முகட்டில்

மஞ்சள் கீற்றாய்

உனது புன்னகை ஒளிர

நான் எனை மறந்தேன்.

அன்றலர்ந்த தாமரையானேன்.

ஞாயிறு போற்றுதும் , ஞாயிறு போற்றுதும் ...

லதா புராணம் # 152


நேற்றிரவிலிருந்து ஒரே பரபரப்பு!
.
.
.
.
.
.
.
நிமிடத்திற்கொருமுறை இணையத்தில் என்ன நடக்கிறது என்று சலசலப்பு.
.
.
.
.
.
.
எழுபத்தைந்து சதவிகிதம்
.
.
.
.
.
.
பள்ளிகள் இருக்காது என்று படித்ததும், தொலைக்காட்சியில் வெள்ளைக்கார ரமணனும் ஆறு முதல் பத்து இன்ச் வரை பனிப்பொழிவு இருக்கலாம் என்று உறுதி செய்தவுடன் ...
.
.
.
.
.
.
பள்ளி இருக்குமா என நாளை காலை வரை எதுவும் நிச்சயமில்லை எனத் தெரிந்தும் விசிலடித்து ஆனந்த கூத்தாடுகிறான்

லதா புராணம் # 153


பனி மூடிய மரங்கள்

விண்ணும் மண்ணும்

வெள்ளை வீடுகளாய்

இன்றைய காலை புலர்ந்தது !

லதா புராணம் #154


உன் பார்வை

எனை வழுவிச்

சென்றாலும்

உன் பாதக்

கொலுசொலிகள்

பாடும் ஜதியை

நானறிவேன்

லதா புராணம் #155


காலையில் காரை பனியில் இருந்து மீட்டு, சாலையை கடந்து பஸ்சை பிடிப்பதற்குள்
போகுதே போகுதே ... என்று கண்முன்னாடியே அதை தவற விட்டு...

'சே' கண் இமைக்கும் நேரத்தில் கோட்டை விட்டுட்டேனே என்று என்னையே நொந்து கொள்ள ...

எனக்கென்ன மனக் கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை
பாணியில் நான் பெத்த ராசா...

சரி,அடுத்த தெருவில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்குப் போகலாம் என்று விரைவாகப் போகையில் ...
இந்த பஸ் டிரைவர் சுத்த மோசம் , நடுவில் நிறுத்தி ஏத்த மாட்டார் , என் பழைய பஸ் டிரைவர் நல்லவர் என்று தனக்கு சாதகமானவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வர ...

அடுத்த தெருவில் பஸ்சிற்காக காத்திருந்த பொழுது அதுவும் வந்து கதவுகளை திறந்து காத்திருக்க,
இது தானே உன் பஸ் என்று பஸ் நம்பரைப் பார்த்துக் கேட்க , செல்லமும் வழித்தட எண்ணை நினைத்து ம்ஹும் , இது இல்லை என்று சொல்லிக் கொண்டே அந்த நம்பரும் கண்ணில் பட,
இது தான், இது தான் என்று சொல்லி அதிரடியாய் ஓடி...

ம்ம்ம்... எனக்கென்ன மனக் கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை

லதா புராணம் #156



கதிரவனின்

கனிந்த பார்வையில்

வெட்கி

நிற்க முடியாமல்

நெக்குருகி

ஆறாய்

ஓடுகிறாள்

பனி மங்கை

லதா புராணம் #157



ஸ்வர்ண

ஜுவாலையுடன்

நீ பவனி

வரும் அழகில்

மனதை பறிகொடுத்து

மயங்கி நிற்கிறாள்

பேதை அவள் !!!

லதா புராணம் #158


தங்க 'விலையேற்றம்'

என்று தானே சொன்னார்கள்?

'தங்க' எடையேற்றம்

ஆனது எப்படி ???

- புரியாத புதிர்!!

லதா புராணம் #159



அதிகாலையில்

ஆழந்த உறக்கத்தில்

கன்னக்குழி விழ

தன்னை மறந்து

சிரிக்கும் குழந்தையின்

சிரிப்பு - priceless

லதா புராணம் #160



அநியாயங்களையும்

அவதூறுகளையும்

செய்தவர்கள்

அநியாயத்திற்கு

நல்லவர்களாக

நடிக்கிறார்கள் !

-உலகம் ஒரு நாடக மேடை !

லதா புராணம் #161



தாயை

களைப்புறச் செய்த

களிப்பில்

களைத்து

கண்ணுறங்கியது

குழந்தை

லதா புராணம் #162


காலனின் கைப்பிடி

தளர்ந்ததில்

மீண்டும்

உயிர்த்தெழுந்தேன் !!!

லதா புராணம் #163

தாயின்

கைகளிலும்

தோளிலும்

மடியிலும்

தன்னை மறந்து

தூங்கும்

குழந்தைக்குத்

தெரியும்

சுகம் என்றால்

என்னவென்று!

லதா புராணம் #163


ஆலிலை கிருஷ்ணனாய்

அன்னை மடியில் தவழ்ந்து

வெண்ணை உண்ட கோபாலாய்

நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்து


குழலூதும் கண்ணனாய்

கேட்பவர்களை வசீகரித்து


கோபியர் கொஞ்சும் ரமணனாய்

வளரும் என் லட்டு கோபால்.



இன்று என் வீட்டில் கோகுலாஷ்டமி...

லதா புராணம் #164 



குழந்தைகளின் தலையணை விளையாட்டில் (pillow fight )

வானிலிருந்து

வெண்பஞ்சு மழை

லதா புராணம் #165


'மூடுபனி'யில்

அழகான 'வீடு' கட்டி

'அழியாத கோலங்கள்' இட்டு

'மூன்றாம் பிறை'யில்

'ரெட்டை வால் குருவி'யை

'மறுபடியும்'

அழகாக

படம் பிடித்து காட்டிய

'நம்மவர்'.

படக் கதாநாயகிகளை

மங்கலான ஒளியிலும்,

சூரிய உதய வேளையிலும்

மஞ்சள் வெயில் மாலையிலும்

கேசம் பறக்க அழகாக

காட்டிய

டைரக்டர் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி!

லதா புராணம் #166


காதலிக்கத் தெரிந்தால்

மட்டும் போதாது

காதலைச் சொல்லவும்

தெரிய வேண்டும் !

இல்லையென்றால்

காதலை

காதலர்களை

நம்பி

கடை விரித்தவர்கள்

எப்படி பிழைப்பை

நடத்துவார்களாம்???

லதா புராணம் #167

காதலடி நீ யெனக்கு,

காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,

வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே

பொங்கி வருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே!

நல்லஉயிரே கண்ணம்மா...

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

லதா புராணம் #168


எப்பொழுதும் கைப்பேசியில்

செய்தி வந்து விடும்.

இன்றும் வரும்

என்று ஏகத்துக்கும்

எதிர்ப்பார்த்ததில் ஏமாற்றமே!

பதறிப் போய்

தொலைக்காட்சி வாயிலாக

தெரிந்து கொண்டதில்

ஒரே ஆர்ப்பாட்டம். . . . . . . . . . .
.
.
.
.
.
.
.

இன்றும் பள்ளிக்கு விடுமுறை!

அடுத்த வாரம் முழுவதும் பனிக்கால விடுமுறை!!!

ஆக மொத்தம், ஊ லலா ஓஹோ ஊ லலா தான்

கும்பகர்ணனும், தாயாரும் மீண்டும்

விட்ட இடத்திலிருந்து

அவர்கள் வேலையைத் தொடர...

லதா புராணம் #169


வெண்பனிக் குவியல்களுடன்

கறுப்புத் தார்ச்சாலைகள்.

பனி படர்ந்த இலைகளுடன்

பச்சை மரங்கள்.

பனிக்காலத்திற்காய் இலைகளை

துறந்த மரங்கள்

வெண்பனிக் கூட்ட

மேகங்களை நோக்கி

ஆதவனை வரவேற்கும்

இனிய காலைப் பொழுது !!!

லதா புராணம் #170

பனி பகவானுக்கு

நாள், கிழமை, நேரம், காலம், பொழுதுகள்

எல்லாம் மறந்து விட்டன

போலும்!

விடுமுறை அன்றும்

கடமை தவறா

கண்மணியாக

பொழிந்து கொண்டிருக்கிறார்!!!!

கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா??

லதா புராணம் # 171


காதலிக்கும் போது

மாயமாவது

கல்யாணத்தின் போது

'மதம்' பிடிக்கிறது !

லதா புராணம் #172


திருமணத்திற்கு முன்

'மிஸ்' ஆகாத கால்கள்

திருமணத்திற்குப் பிறகு

'மிஸ்டு கால்'களாக

பரிணாமம் !

லதா புராணம் #173


அம்மா எங்களுக்குச் சொன்னது ..

யாராவது மிட்டாய். பிஸ்கட் குடுத்தா வாங்க கூடாது.

தெரியாதவங்க கிட்ட பேசக் கூடாது.

அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க-ன்னு சொன்னா நம்பி அவங்களோட போகக் கூடாது.

நான் என் குழந்தைகளுக்குச் சொல்வது ...

கார் வர்ற எதிர் திசையில் நடக்கணும்.

இந்த அட்ரஸ் தெரியுமா, நாய் காணமா போயிடுச்சு, பார்த்தியா-ன்னு கேட்டா பேசாம ஓடியே போயிடணும்.

முடிஞ்சா யார் வீட்டுக் கதவையோ தட்டி உதவி கேட்கணும்.

அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு-ன்னு சொன்னா நம்பி அவங்களோட போகக் கூடாது...

ம்ம்ம்ம்...

காலங்கள் மாறினாலும் கவலைகள் வெவ்வேறு ரூபத்தில் ...

லதா புராணம் #174


நான் வெளியில வர்ற மாதிரி வருவேனாம்

நீ 'ஊ'-ன்னு பேய்க் காத்து அடிக்கிற மாதிரி அடிப்பியாம்

அவனும் அழுகுற மாதிரி 'ஓ'- ன்னு அழுவானாம்

சூரிய, வாயு & பனி பகவான்கள் நடத்தும்

வான் அரசியல்

இந்திய அரசியலையே மிஞ்சி விடுகிறதே!!!!
.
.
.
.
.
.

எப்பவும் போல பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு

வேற யாரு?

லதா புராணம் #175

No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...