Wednesday, February 5, 2020

கே.டி


பெற்றவரே ஆனாலும் மூப்பும் நோயும் வந்த பிறகு யார் அவரைப்  பார்த்துக் கொள்வது, செலவுகளைச் சமாளிப்பது என்பதில் ஆரம்பித்து சொத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு அவர் கதையை முடித்து விட வேண்டும் என்ற கொடிய எண்ணம் பெற்ற குழந்தைகளிடையே வருவதை எண்ணி வெட்கி தலைகுனிய வைக்கிறது இப்படம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெற்றவர்களைப் புறக்கணிக்க ஆயிரம் காரணங்கள். திருமணமான மகனோ, மகளோ தத்தம் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம். பெற்றோர்களுடன் செலவிடும் நேரங்களும் குறைவு. அவர்களுடைய ஆசைகள், விருப்பங்களைக் கேட்டுக் கொள்வதுமில்லை. அப்படியே கேட்டுக் கொண்டாலும் இந்த வயதில் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அவர்கள் வாயை எளிதில் கட்டிப்போட முடிகிறது. நாளைக்கு நமக்கும் அது தான் நிலைமை என்று யோசிக்காமலே!

துணையை இழந்த மனிதர்கள் அதுவும் மனைவியை இழந்த கணவர்களின் நிலைமை மிகவும் கொடூரம் தான். இப்படத்தில் அந்த முதியவர் தான் விரும்பிச் சாப்பிடும் பிரியாணியை ரசித்து ருசித்து உண்பது, தன்னுடைய சிறுவயது ஆசைகள் நிறைவேறுகையில் குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து மனம் திறந்து சிரிப்பது... வயதானவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இப்படம்.

முதுமையில் அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கனிவான பேச்சும், அனுசரணையும், அன்பும் ஆதரவும் தான். நாளை நம்முடைய நிலைமையும் இதுதான். யோசித்து நடப்போமா?

படம் முழுவதும் கூடவே பயணிக்கும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம், வெள்ளந்தி மனிதர்கள், கோவில், குளம், மலைகளும் அழகு.










No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...