மிகை நடிப்பு இல்லாத எதார்த்தமான கதாபாத்திரங்கள். அழகிய கதை. படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை கதாநாயகி சமைப்பதும் சாப்பிடுவதும் அதனூடே அவளின் அம்மாவுடன் வாழ்ந்த இனிய பொழுதுகளும் நினைவுகளுமாய் வெகு அழகாக நகர்ந்து செல்கிறது. நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த ஊரில் எளிதான, மனநிறைவான, நண்பர்களுடன் கொண்டாட்டமான வாழ்க்கையை ஒரு பெண் தனியாக எந்த வித கட்டுப்பாடுமின்றி வாழ முடியும் என்பதே கனவாகிப் போன காலத்தில் (இந்தியாவில்) இத்தகைய படங்களைப் பார்க்கும் பொழுதே புத்துணர்ச்சியையும் ஏக்கத்தையும் தருகிறது. இயற்கையாக தாமே விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், மாறும் பருவங்கள், தென் கொரியாவின் கிராமத்துச் சூழல் காண்போரை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து மகிழலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தை வளர்ப்புச் சவால்கள்
கூட்டுக்குடும்பங்களில் வளர்ந்த, வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் இருப்பினும் பள்ளிகள் கற்று...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
No comments:
Post a Comment