மிகை நடிப்பு இல்லாத எதார்த்தமான கதாபாத்திரங்கள். அழகிய கதை. படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை கதாநாயகி சமைப்பதும் சாப்பிடுவதும் அதனூடே அவளின் அம்மாவுடன் வாழ்ந்த இனிய பொழுதுகளும் நினைவுகளுமாய் வெகு அழகாக நகர்ந்து செல்கிறது. நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த ஊரில் எளிதான, மனநிறைவான, நண்பர்களுடன் கொண்டாட்டமான வாழ்க்கையை ஒரு பெண் தனியாக எந்த வித கட்டுப்பாடுமின்றி வாழ முடியும் என்பதே கனவாகிப் போன காலத்தில் (இந்தியாவில்) இத்தகைய படங்களைப் பார்க்கும் பொழுதே புத்துணர்ச்சியையும் ஏக்கத்தையும் தருகிறது. இயற்கையாக தாமே விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், மாறும் பருவங்கள், தென் கொரியாவின் கிராமத்துச் சூழல் காண்போரை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து மகிழலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?
சொல்வனம் இதழ் - 338ல் வெளிவந்த என்னுடைய கட்டுரை சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? அமெரிக்க அரசின் ப...

-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...
No comments:
Post a Comment