மிகை நடிப்பு இல்லாத எதார்த்தமான கதாபாத்திரங்கள். அழகிய கதை. படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை கதாநாயகி சமைப்பதும் சாப்பிடுவதும் அதனூடே அவளின் அம்மாவுடன் வாழ்ந்த இனிய பொழுதுகளும் நினைவுகளுமாய் வெகு அழகாக நகர்ந்து செல்கிறது. நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த ஊரில் எளிதான, மனநிறைவான, நண்பர்களுடன் கொண்டாட்டமான வாழ்க்கையை ஒரு பெண் தனியாக எந்த வித கட்டுப்பாடுமின்றி வாழ முடியும் என்பதே கனவாகிப் போன காலத்தில் (இந்தியாவில்) இத்தகைய படங்களைப் பார்க்கும் பொழுதே புத்துணர்ச்சியையும் ஏக்கத்தையும் தருகிறது. இயற்கையாக தாமே விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், மாறும் பருவங்கள், தென் கொரியாவின் கிராமத்துச் சூழல் காண்போரை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து மகிழலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சிகரம் தொட்டவர்களின் கதை
2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பா...
No comments:
Post a Comment