Sunday, January 5, 2020

உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்

நவம்பர் 25 உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்.

உடல், பாலியல், உளவியல் ரீதியாக பெண்கள் படும் சித்திரவதைகள் வெளியுலகம் அறியா வண்ணம் பலரும் அனுபவித்து வரும் துயரம் இருபதாம் நூற்றாண்டிலும் தொடருவது தான் கொடுமை . குழந்தைத்திருமணங்கள், பெண் குழந்தைகள் கடத்தல் , சில பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு கணவரால், அவர் குடும்பத்தினரால், பிறந்த வீடுகளில் உடன் பிறந்தவர்களால், பெற்றவர்களால், உறவுகளால், சமூகத்தில் வேலையிடத்திலும் வெளியிடங்களிலும், பள்ளிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்கள் ஆணதிக்கவாதிகளின் அதிகார துஷ்பிரயோகமும், பெண்ணை அடிமையாகவும், போகப்பொருட்களாகவும் நோக்கும் மனப்பாங்கே! ஒவ்வொரு பெண்ணிற்கும் நடக்கும் வன்முறை, அதற்கு ஒத்துழைக்கும் ஆண்களின் தோல்வியையே பறைசாற்றுகிறது.

வீட்டின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வீடு முன்னேற பெண்களின் சுதந்திரமும், கல்வியறிவும், அச்சமில்லா உலகமும் அவசியம். ஆண்களின் ஒத்துழைப்பில் மட்டுமே இவையெல்லாம் சாத்தியப்படும். ஒவ்வொரு ஆண்மகனின் கடமையும் கூட!

சாதி, மதம், இனம், மொழி, நாடு வேற்றுமைகள் மறந்து பெண்ணினத்திற்காக , பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகப் போராடும் நல்லுள்ளங்கள் வாழ்கவே!

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;”


No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...