Sunday, January 5, 2020

தடுப்பூசி அவசியமா ?


உயிரைக் கொல்லும் வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது. சமீப காலமாக சிலர் இது இயற்கைக்கு முரணானது. நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல ரீதியில் தடுப்பூசிகளுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். இது சரியா தவறா என்று வாதிடுவதற்கு முன் நாம் வாழும் காலத்தில் புதிது புதிதாக நோய்களும் கிருமிகளும் உயிரை அச்சுறுத்தும் வேளையில் அவற்றினின்று தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மையை வழங்கும் ஊசிகள் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அத்தியாவசியமானதை இன்று சிலர் எதிர்க்கத் துவங்கியுளளர்கள்.

அமெரிக்காவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு முன் சில தடுப்பூசிகள் கட்டாயமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மத நம்பிக்கையின் பேரில் அதற்கு விலக்கம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஐந்தில் ஒரு குழந்தை தடுப்பூசி போடாமல் இருப்பது சுகாதாரத்துறையினரை கலங்கடித்து வருகிறது.

இன்றோ மத ரீதியாக, தத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் , தனிமனித சுதந்திரத்தின் தலையீடாக தடுப்பூசிகள் அளிப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சமுதாயம் ஒன்று உருவாகியுள்ளது. ஆல்பனி நகரில் இரண்டு நாட்களாக போராளிகள் இந்த கட்டாயமாக்கலை எதிர்த்துக் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்படப் போவது அவர்களும் அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் தான் என்று அறியுமோ இப்போராட்ட சமூகம்?


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...