Sunday, January 5, 2020

Rivers Remember

டிசம்பர் 2015 சென்னை மக்கள் பலரும் மறக்க முடியாத மாதம்! யாரும் எதிர்பாராத இரவொன்றில் ஆற்று நீர் வெள்ளத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு மாறும் என்று நினைத்துக் கூட பார்க்காத அந்நாளில் நடந்த உயிர், உடைமையிழப்புகளும் ஏராளம். தத்தம் குடும்பத்தினரை எண்ணி வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்களும் கலக்கம் கொண்டிருந்த நாட்களும் அவதியுறும் மக்களுக்குத் தங்களான உதவிகளைச் செய்ய மக்கள் பலரும் களத்தில் இறங்கியவர்களும் தொலைவில் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக உதவி செய்தவர்களும் என்று மக்கள் எனும் அற்புத சக்தி சமூக வலைதளங்களின் மூலம் இணைந்து மதம், மொழி, இனம் தாண்டி உதவியதை கண்முன்னே கண்ட அதிசய நாட்களை எளிதில் மறக்க முடியாது தான்!

"Rivers Remember" புத்தகத்தை எழுதிய Krupa GE தன்னுடைய சொந்த அனுபவங்களுடன் அன்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் வாயிலாக கண்டறிந்த உண்மைகளையும் எழுதியிருக்கிறார். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் மெத்தனப்போக்கே இத்துயரத்திற்கெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்துடன் எழுதியிருப்பதைப் படிக்க வருத்தமாகத் தான் இருக்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மக்களை அலைக்கழித்த ஆற்று நீர் வெளியேற்றத்தை முறையாக கையாளத் தவறவிட்டதும் இன்னல்படும் மக்களைக் காக்க தவறியதும் மீனவ சமுதாய மக்கள் படகு மூலம் தவித்தவர்களைக் காப்பாற்றியதும் என்று அன்று நடந்த பல நிகழ்வுகளையும் விரிவாக விவரித்துள்ளார். சென்னை ஆறுகளின் அன்றைய , இன்றைய நிலைகளையும் மனிதர்களின் சிந்தனையற்ற போக்கால் எவ்வாறு நீர் வளங்களைச் சுரண்டி பாதைகளை மறித்து எதிர்கால சந்ததியினருக்கு கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

புரிகிறது. சுற்றுப்புறச்சூழல் என்ற ஒன்றை முற்றும் மறந்து சுயநலம் ஒன்றே ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை உருவாக்கும் கல்வியும், அரசும், மக்களும் விழிப்புறும் நாள் தான் எந்நாளோ?


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...