Thursday, June 4, 2020

One Spring Night

கொரியன் டிராமா வரிசையில் அடுத்து நான் பார்த்து ரசித்தது "One Spring Night". சில தொடர்களைப் பார்க்க பார்க்க பிடிக்கும். சில தொடர்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். ஆரம்பக்காட்சியே வசந்தகால செர்ரி மலர்கள் அடர்ந்த சாலையில் பயணிக்கிறது. அதுவே போதுமானதாக இருந்தது இத்தொடரைக் காண.

குடும்பத்தோடு இணைந்த காதல் கதைக்களம். பெரும்பாலான இந்தியன் அப்பாக்கள் போல பெண்களுக்கு அவர் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பா கதாபாத்திரம். மனைவியிடமும் ஒரே அதிகாரம். பெண்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகப்  பேசும் அழகான அம்மா. மூன்று பெண்கள். ஒரு அழகான சுட்டிப்பையன். அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை. இப்படிக்கூட அழகாக ஒரு தொடரை எடுக்க முடிகிறது. ஹ்ம்ம்...

கணவனால் சித்திரவதை செய்யப்படும் பெண் நன்கு படித்து நல்ல வேலையிலும் இருப்பவர். திருமண உறவிலிருந்து வெளிவர நம்மூர் பெண்களைப் போலவே அவருக்கும் அத்தனைப் பிரச்னைகள். மேலைநாடுகள், முன்னேறிய நாடுகளில் கூட பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகம் என்பதை இத்தொடரில் காண முடிகிறது.

பல வருடங்களாக டேட்டிங் செய்பவனிடமிருந்து சிறிது சிறிதாக விலகும் பெண். காதலியை இரண்டாம்பட்சமாக நடத்துவதும் அவள் விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்குவதுமாய் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லியே காயப்படுத்திக் கொண்டே இருக்கும் முன்னாள் காதலன்.

பொறுப்பற்ற ஆனால் அன்பான மூன்றாவது பெண்.

இவர்களிடையே தென்றலாய் வருகிறான் கதாநாயகன். ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அவள் விருப்பத்திற்காக காலத்திற்கும் தவமிருக்கும் கதாபாத்திரம். அந்த சிரிப்பழகனே தான் காதல் நாயகன். காதலிக்கு ஒன்று என்றால் எப்படி துடிதுடிக்கிறான்? ச்ச்சோ ஸ்வீட் பாய் 😍

ஒரு குழந்தைக்குத் தந்தை. அவனையா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்னிடம் இல்லாதது அப்படி என்ன தான் அவனிடம் இருக்கிறது என்று எகிறும் முன்னாள் காதலனிடம், அன்பு மட்டுமே அவனிடம் இருக்கிறது அது மட்டுமே போதும் என்று போராடும் நாயகி.  நாயகனிடம் சேர எத்தனை தடங்கல்கள்?

இத்தொடரிலும் நல்ல நண்பர்கள். அருமையான கதைக்களம். அழகான ஒளிப்பதிவு. செர்ரி மலர்கள், பச்சை மரங்கள், செடிகள், கொடிகள் என கண்களுக்கும் விருந்தாக காட்சிகள். பின்னணியில் வரும் பாடல்களும் தாலாட்டுகிறது.

எஸ். கிம்ச்சியும், நூடுல்ஸும் உண்டு😉 குடும்பத்தோடு உணவருந்துகிற காட்சிகள் இல்லாத தொடரகளே இல்லை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

குடும்பம், காதல், அழுகை, செண்டிமெண்ட் என இருந்தாலும்
எந்த விகல்பமுமில்லாமல் எவ்வித எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தாமல் இயல்பான காட்சிகளோடு ஆனந்தமாக ஒரு தொடரை அளிக்க முடிகிறது. ஹ்ம்ம்ம்...தமிழ்நாட்டில் தான் அந்த கொடுப்பினை இல்லை😞😞😞

இனி எண்ட தேசம்... சவுத் கொரியா 💖💗💕

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...