Thursday, September 8, 2022

ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவில்


நியூஜெர்சி மாநிலத்தில் ஃப்ராங்க்ளின் நகரில் புதிதாக ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவிலைக் கட்டி வருகிறார்கள். கோபுர வேலைகள் துவங்குவதற்கு முன்பு பெருமாளை பிரதிஷ்டை செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். தற்காலிகமாக எதிரில் உள்ள கட்டிடத்தில் உற்சவ மூர்த்திகளுடன் தினப்படி பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. இக்கோவில் ஶ்ரீரங்கத்தில் இருக்கும் ஆண்டவன் ஆசிரமத்தைச் சார்ந்தது என்று அங்கிருந்த பட்டர் கூறினார். ஶ்ரீராமானுஜர் மடத்தைச் சேர்ந்த கொடையாளர்களின் தயாள குணத்தால் இங்கும் ஓரு கோவில்

கோவிலைக்கட்டும் பணியைச் செய்ய சிவகங்கை, புதுக்கோட்டையிலிருந்து இருவர் வந்திருந்தனர். அவர்களைச் சந்தித்துப் பேசியதில் “பலருக்கும் விசா கிடைக்காததால் வேலை மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. பனிக்காலத்திற்குள் வெளிவேலைகளை முடிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நம்மூர் மக்களைப் பார்த்துப் பேசிய சந்தோஷத்துடன் ஊர் திரும்பினோம். அடுத்த வருடம் கோடையில் கும்பாபிஷேகம் நடக்கலாம்.





No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...