Thursday, September 8, 2022

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்



'மெமோரியல் டே' யில் தொடங்கி 'லேபர் டே'யில் முடிந்தது கோடையின் தாக்கம் மட்டுமல்ல விடுமுறையும் தான். மழைக்காலத்தில் வெளியில் வந்த குழந்தைகள் கோடை முழுவதும் வியர்வை சிந்த விளையாடிக் களித்து கொண்டாடி விட்டார்கள். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் சிறார்கள், விர்ரென பறந்து செல்லும் இளங்காளைகள், லாங்போர்டில் சறுக்கிக் கொண்டு தெருவை வலம் வந்தவர்கள் நண்பர்களுடன் கூடைப்பந்து நீச்சல் என்று ஒரே ஆட்டம் தான். வெயில் அதிகமான நாட்களில் அவரவர் வீட்டில் இருந்து வீடியோ விளையாட்டின் மூலம் தொடர்பிலேயே இருந்தனர்.
 
விடுமுறையில் தான் அக்கம்பக்கத்து ஆட்களுடன் பேசும் வாய்ப்புகளும் அதிகம். அவர்கள் உலகில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளவும் முடியும். ஊர்களில் இருக்கும் அனைத்துப் பூங்காக்களிலும் குழந்தைகளின் சிரிப்பும் துள்ளலும் ஊஞ்சல் ஆட்டமும் பள்ளி திறந்த இந்நாள் முதல் குறைய ஆரம்பிக்கும். விடிகாலை விண்ணழகை கூட்டிய வசீகரனும் பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையாய் வான் வர மறுக்கும் இலையுதிர் காலமும் நெருங்கி விட்டது. சுடும் வெயிலும் மறைந்து இளந்தென்றல் சாமரம் வீச, நிறம் மாற ஆரம்பித்து விட்டது இலைகளும்.
 
வருங்கால கனவுகளுடனும் கடமைகளுடனும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அவர்களைச் சுமந்து செல்லும் வண்டிகளின் போக்குவரத்துகள் என்று காலை பம்பரமாய் நாட்கள் சுழலும். இனி இளவெயில், மழை, தென்றல் சாமரம் வீசும் காலை, மாலைப் பொழுதுகளென கழியும். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் தெருவில் விளையாடுவதும் குறையும். பணியும் பனியும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும்.
 
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
இன்பம் தொலைந்தது இன்று
பள்ளி திறந்தது என்று

குழந்தைகளும்

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
இன்பம் தொலைந்தது எப்போ?
ஸ்கூல்டாக்ஸ் கட்டணும் இப்போ....

என்று பெற்றோர்களும் மீதமிருக்கும் கோடையை அனுபவித்துக் கொண்டே

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...