Tuesday, March 5, 2024

சௌராஷ்ட்ரா சமூகத்தின் மும்மூர்த்திகள்

கர்னாடக சங்கீத உலகில் மும்மூர்த்திகள் யார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவர். இவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ தியாகராஜர். அவர் பாடிய கீர்த்தனைகள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய பிரதம சீடரும் குருவிற்கு நெருக்கமானவருமான ஸ்ரீவேங்கடரமண பாகவதர் ஆவார்.

சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவர், பாடிக் கொண்டே செல்லும் தன் குருவைத் தொடர்ந்து சென்று பாடல்களைக் கேட்டு ஓலைச்சுவடியில் குறித்து வைத்துச் சென்றதைத் தான் இன்று மக்கள் கற்றறிந்து பாடி மகிழ்கின்றனர். மகிழ்விக்கின்றனர். இவர் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சுவாமிகளின் கீர்த்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது. எத்தகைய பேரிழப்பிலிருந்து அவர் நம்மைக் காப்பாற்றி உள்ளார்!

அவருடைய ஜன்ம நட்சத்திரம் மூல நன்னாளான இன்று (மார்ச் 3)ல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் அவருடைய சன்னிதியின் முன்பு வீணை இசைக்கலைஞர்கள் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி வாசித்ததைக் கேட்க அருமை. சௌராஷ்டிரா சமூகத்தின் மும்மூர்த்திகளான ஸ்ரீவேங்கடரமண பாகவதர், ஸ்ரீவெங்கடசூரி, ஸ்ரீநடனகோபால சுவாமிகள் மூவருக்கும் சிறப்புப் பூஜைகளும் அலங்காரங்கரங்களும் நடைபெற்றது.

 வீணை இசைக்குழு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.

கோவிலில் வீணை வாசிப்பைக் கேட்க அத்தனை அருமை. தெய்வீக வாத்தியம். ராகம். இசை என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்து விட்டது.



No comments:

Post a Comment

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

சொல்வனம் இதழ் 353ல் வெளிவந்த கட்டுரை  இராணுவ உடையில் ஒரு கூலிப்படை – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026 ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தா...