Sunday, March 3, 2024

சமூகம் என்று தெளியுமோ?

சமீபத்தில் ஆசையுடன் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்திருந்த தம்பதியர் இருவர் வடமாநிலத்தில் துன்பகரமான நிகழ்வை எதிர்கொண்டுள்ளனர். கணவரை அடித்துப் போட்டு மனைவியை ஏழு பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். நேபாளுக்குச் செல்லும் வழியில் ஜார்கண்ட் மாநிலத்தில் 'டும்கா' என்னும் ஊரில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் டெண்ட் போட்டு இரவு தங்கியிருக்கிறார்கள். ஏழு இளைஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு தான் அந்தப் பெண்ணுக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தியா வெட்கி தலைகுனிந்து நிற்கிறது.

செய்தியைப் படித்ததும் அந்த வெளிநாட்டுப் பயணிகளுக்காக மனம் வருந்தியது. அதுவும் அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது. வெளிநாட்டினர் அதுவும் பெண்கள் தனியாகப் பயணிப்பது அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. அங்கு தனியாகச் சுற்றுவது போல் இங்கும் சுற்ற ஆசைப்பட்டு வருகிறார்கள். பலருக்கும் நம் நாட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மாதிரி தாக்குதல்களுக்கு அஞ்சுகிறார்கள். உள்ளூரில் பிறந்து வளர்ந்த நாமே பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்ப இன்று வரை பயந்து கொண்டு இருக்கிறோம். அப்படியிருக்க, இவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். எத்தனை ஆசையுடன் கனவுகளுடன் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்திருப்பார்கள். இனி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வடுக்களுடன் வாழ வேண்டும். பெண்கள் இந்தியாவிற்கு வரவே அச்சப்படுவார்கள்.

இந்தக் கொடிய குற்றங்களைச் செய்த கழிசடைகளை ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும். கொடுக்கும் தண்டனை இனி எவரும் இத்தகைய கொடிய செயலை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது. ஆனால், நமக்கு வாய்த்த கனிமொழிகள் கொடுங்கோலர்களுக்குத் துணையாக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தையல் மெஷின் கொடுத்து வெளியில் உலவ விடுகிறார்கள். முதலில் இந்த அரசியல்வியாதிகளைத் தான் நாம் புறந்தள்ள வேண்டும். இவர்கள் தான் நாட்டுக்குப் பிடித்த கேடு.

நம்முடைய 200ரூபாய் கொத்தடிமைகள் வழக்கம் போல பாரதப் பிரதமரை தீராவிட பாணியில் இகழ்ந்து பதிவுகளைப் போட்டிருந்தார்கள். அந்த மாநிலத்தின் ஆளும்கட்சி இண்டி காங்கிரஸ் என்றவுடன் வாலைச் சுருட்டிக் கொண்டு மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

தவறு எவர் செய்தாலும் தவறு தான். இந்த விஷயத்தில் அரசியலைப் புகுத்த நினைத்து வழக்கம் போல் சூடு போட்டுக் கொண்டது திராவிட பைத்தியங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது வெட்கப்படவேண்டியது ஆணினமே.

என்று பெண்கள் தனியாகப் பயமின்றி இரவில் வெளியே செல்ல முடிகிறதோ அன்று தான் உண்மையான விடுதலை. அதுவரையில் கழிசடைகளை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் பெண்கள்.

குடிக்கும் போதைக்கும் அடிமையான சமூகம் அச்சத்தைத் தருகிறது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் போதைமருந்து கலாச்சாரம். கண்டுகொள்ளாத திராவிடக்கட்சிகள். விழித்துக் கொள்ள வேண்டியது மக்களே!

மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு நடந்த அநீதியை இன்னும் ஜீரணக்கவே முடியவில்லை. மணிப்பூருக்குப் பறந்து சென்ற கனிமொழி வகையறாக்கள், ராஹுல், பிரியங்கா காந்திகள் இன்று வரையில் மௌனம் காக்கிறார்கள். இது தான் இவர்களின் உண்மையான முகம்.

இலவசத்திற்கும் டாஸ்மாக்கிற்கும் போதைக்கும் அடிமையான சமூகம் என்று தெளியுமோ?


No comments:

Post a Comment

சொந்த ஊர் சோகங்கள்

முன்பெல்லாம் தெரு முக்கில் யார் வீடு இருக்கிறதோ இல்லையோ மனசாட்சியே இல்லாமல் ஓரத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு நழுவிப் போவார்கள் மதுரை மக்கள்....