Tuesday, November 11, 2025

நம் பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பு

இந்தக் காணொளியில் வக்கீல் சுமதி அவர்கள் பேசியிருக்கும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.  Advocate Sumathi Interview

ஊடகங்களுக்கு என்று ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது. இருந்தது கொத்தடிமைகள் ஆவதற்கு முன். இப்பொழுதோ ஊழல்வாதிகளை, கயவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் வக்கிர எழுத்துக்களாலும் பேச்சாலும் பாதிக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குத் தீராத வலியை உண்டாக்குகிறார்கள்.

போதைப்பொருட்கள் தீராவிட ஆட்சியில் பெருகி ஒடுவதை கேட்க துப்பில்லாதவர்கள் இந்த ஆர்எஸ்பி ஊடகவியாதிகள்.

பெண்களுக்குப் படிக்கும் இடத்தில், வீட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்கின்ற பொழுது மேலும் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சுமதி அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.

அதுபோலவே, தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை இப்படியான குற்றங்கள் தொடரும் என்றதும் 100% சரி.

டில்லி நிர்பயா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொடூரன் மைனர் என்று தையல் மெஷின் கொடுத்து விடுதலை செய்ய சொன்ன கனிமொழி அரசியல்வியாதிகள் சாபக்கேடு.

இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்பட்டு கயவர்களைப் பிடித்த காவல்துறைக்குப் பாராட்டுகள்.

தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைக்கும் நீதியரசர்கள் விரைவில் மரணதண்டனை தருவார்களா? கயவர்களை வெளியில் விடுவதால் தான் இந்த அவலங்கள் அதுவும் திராவிட மாடல் அரசாங்கத்தில் சர்வ சாதாரணமாக பெருகியிருக்கிறது.

இந்தப் பொறுக்கிகளுக்கு ஆதரவாக வழக்காட எந்த வக்கீலும் வரக்கூடாது. அரசு தரப்பும் இந்தக்கயவர்கள் வெளியில வராதபடி தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நாய்களுக்கெல்லாம் உடனடி மரணதண்டனை தான் சரியானது. 

கொடுப்பார்களா 😡😡😡

 


No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...