Monday, May 6, 2019

Alone in Berlin


ஹிட்லரின் கொடுங்கோல ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் உட்கார்ந்து பார்க்கும்படிதான் இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுடைய குழந்தைகளை போர்முனைக்கு அனுப்புவதும் பெண்கள், ஆண்கள் அனைவரையும் போருக்குத் துணையாக வேலைகளைச் செய்ய வைத்தும், சந்தேகப்படும் நபர்களைக் கொன்று குவிப்பதும், யூதர்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், ஹிட்லரைத் தெய்வமாகவும் அவர் செயலுக்கு ஆதரவாக மூளைச்சலவையும் செய்யப்பட்டிருப்பது போல் இயங்கியிருக்கிறார்கள் ஜெர்மானியர்கள். அவர்களிடையே பல நல்ல மனிதர்களும் யூதர்களுக்கு ஆதரவாக இருந்து பலரையும் காப்பாற்றியிருப்பதும் வரலாறு அறியும்.

ஃப்ரான்ஸ் நாட்டுடனான போரில் தங்கள் ஒரே மகனை இழந்த பெற்றோர்கள் ஹிட்லருக்கு எதிராக செய்யும் மௌன யுத்தமே கதை. அவர்களிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அரசுக்குத் துணையிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஒரு சிலராவது ஹிட்லருடைய தவறுகளையும் அவரால் கொல்லப்படும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் செய்யும் செயலில் உண்மையை உணர்ந்தும் உதவி செய்ய இயலாத நிலையில் காவல்துறை அதிகாரியும், கொடுங்கோலனுக்குத் துணையாக கொடூர அரசு அதிகாரிகளும், நாஜிப்படைகளுக்குப் பயந்து வாழும் யூத மக்களும், அவர்களுக்கு உதவும் சில நல்லுள்ளங்களும் என்று படம் முழுவதும் வருகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்பது எப்படியெல்லாம் பாதிக்கும், எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் படம். மெதுவாக நகர்ந்தாலும் பார்க்க வைக்கிறது.


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...