Monday, May 6, 2019

முகநூல் பதிவு - மாறாத ஒரு இனம்

நேற்று கோவில் கலையரங்கத்தில் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி குழந்தைகள் வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டியம், ஹரிகதா வாயிலாக இனிய தமிழில் வழங்கியது அருமையாக இருந்தது. அவர்களின் பாசுரங்களை நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த சுபா ஸ்ரீனிவாசன் கணீரென்ற குரலில் லயித்துப் பாடி கேட்போரை ஆனந்தப்படுத்திக் கொண்டிருந்தார். வயலின் வாசித்த ஸ்ரீநாத் என்ற இளைஞனும் மிருதங்கம் வாசித்த ஷங்கரும் அவரின் பாடலுக்கு இனிமையைக் கூட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜானகிக்கு பாராட்டுகள்.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலரும் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து மெதுவாக ஊர்க்கதைகளை உரக்கப் பேசி, நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறதே என்ற நினைவு கூட இல்லாமல் நடந்து கொண்டது அநாகரீகம் என்றால் குழந்தைகள் ஓடியாடி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததை எந்த பெற்றோரும் கண்டு கொள்ளாதது அதை விட கொடுமையாக இருந்தது. தத்தம் குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் பலரும் சென்று விட்டார்கள். நடுவில் பத்து நிமிட இடைவெளியில் சுண்டல் சாப்பிடச் சென்ற பலரும் அங்கேயே தங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ஐம்பது குழந்தைகளை பல நாட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களும் தமிழில் பேசியதைக் கேட்க அழகாக இருந்தது. அதுவும் தெள்ளத் தெளிவாக ஹரிகதா சொன்ன க்ருஷா அனைவரையும் வசீகரித்து விட்டாள். தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்களும் பல நாட்கள் அலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க, மற்ற குழந்தைகளின் நிகழ்ச்சியையும் பாடுவோரையும் கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்திருக்க வேண்டாமா?

இதே பெற்றோர்கள் தான் இரட்டை அர்த்தப்பாடல்களுக்கு டப்பாங்குத்து ஆட்டம் போடும் நடனங்களுக்கு கடைசி வரை இருந்து பார்த்து கைத்தட்டி விட்டுச் செல்கிறார்கள்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாறாத ஒரு இனம் உண்டெனில்...









No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...