Monday, December 18, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள்


படத்தலைப்பைப் பார்த்தவுடன் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்திலிருந்து தான் கதையை எடுத்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் எடுத்து சொதப்பி வைக்காமல் விட்டுவிட்டார்கள். நல்ல வேளை! இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறது. எப்படி அதே தலைப்பு என்ற கேள்வியுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். 

கதாநாயகன் அசோக் செல்வன். நான் பார்த்த இவர் படங்கள் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறது. நடிக்கவும் செய்வார். அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்து இந்தப்படத்தில் கோவக்கார 'விஜி'யாக பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரமே வந்தாலும் நாசர் உள்ளூர் பாஷையைப் பேச முயற்சி செய்ததால் வழக்கமான குரலைக் கேட்க முடியவில்லை. நாயகனின் நண்பனாக வருபவர், 'குட் நைட்' படத்தில் நடித்த மணிகண்டன் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். 

அடுத்தவருக்காக ஆடமபரமாக வாழும் இளைஞன், தன் குறைகளை உணராமல் திருத்திக் கொள்ளாமல் உயர துடிக்கும் இன்னொருவன்,  விபத்தில் காயம்பட்டு கிடப்பவரைக் காப்பாற்ற நினைத்து பழியைச் சுமந்து அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் மற்றொருவன்  இவர்களுடன் தான் விரும்பும் நேசிக்கும் மனிதர்களைத் தன் பேச்சுக்களால் செயல்களால் தொடர்ந்து காயப்படுத்தும் கதாநாயகன். இந்த நான்கு குடும்பங்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்று காட்சிகள் நகர்ந்து ஓரிடத்தில் நடக்கும் விபத்தில் அனைவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரவர் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார்கள். 

தவறு செய்யாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள்? செய்த தவற்றைத் திருத்திக் கொள்பவர்கள் தான் அதிகம் இல்லை. அதைத்தான் இப்படம் கூறுகிறது. மேல்தட்டு, கீழ் தட்டு, நடுத்தர வர்க்கம் என்று நகர்கிறது. 

சமூக வலைதளத்தின் அழுக்குப்பக்கத்தை, அறமற்ற ஊடகவியலாளர்களின் அநாகரீகப் போக்கையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

நல்ல படம். 




No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...