தெலுங்கில் இருந்தாலும் கதை புதுமையாக இருக்கவே நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ள 'தூதா' தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் சில பாகங்களில் வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஏதோ மர்மத்தொடர் போல இருக்கிறதே என்று பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய மரணங்களின் முடிச்சு அவிழும் நேரத்தில் முழுக்கதையும் புரிகிறது. கடைசி வரை அந்த ஆவலைத் தக்க வைத்துக்கொண்டதில் கதாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
நாக சைதன்யா தனக்கான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். நடிகை பார்வதியும் அவருடைய துப்பறியும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாக சைதன்யாவின் மனைவியாக பிரியா பவானியும் ஓகே.
சில இடங்களில் கதை இப்படித்தான் போகப் போகிறது என்று கணிக்க முடிந்தாலும் கதை மாந்தர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து முடித்த விதம் அருமை. மழையும் ஒரு கதாபாத்திரமாய் தொடர் முழுவதும் வருவது அழகு.
வெட்டி செண்டிமெண்ட் சீன்கள் இன்றி பெண்கள் புகைபிடிப்பது, மது அருந்துவது, படுக்கை அறைக்காட்சிகள், சரளமாக கெட்ட வார்த்தைகள் என்று ஹிந்தி, தமிழ் தொடர்களைப் போல் இல்லாததும் இத்தொடரின் சிறப்பம்சம்.
நம்மூர் பசுபதி தான் அந்த ஆவியோ?
ஜனநாயகத்தின் நான்காவது தூண் இன்று ஊழலுக்கும் ஊழல் கறைபடிந்த அரசு அதிகாரிகளுக்கும் சாமரம் வீசினால் உண்மையிலேயே இப்படி மர்மச்சாவுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொண்டு விடும் மனப்பக்குவத்திற்கு நம்மை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்று அரசு அதிகாரத்திற்குப் பயந்து தங்களுடைய தார்மீக பொறுப்பை மறந்து மக்களை மடைமாற்றும் திறனற்ற, பண்பற்ற ஊடகங்கள், ஊடகவாசிகளுக்கு இந்தத் தொடரை அர்ப்பணம் செய்யலாம்.
திருந்துங்கடே!
Monday, December 18, 2023
Subscribe to:
Post Comments (Atom)
சொந்த ஊர் சோகங்கள்
முன்பெல்லாம் தெரு முக்கில் யார் வீடு இருக்கிறதோ இல்லையோ மனசாட்சியே இல்லாமல் ஓரத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு நழுவிப் போவார்கள் மதுரை மக்கள்....
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பா...
No comments:
Post a Comment