Wednesday, May 1, 2024

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்




மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹூடா' கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார். 18 வயதில் தாய்நாட்டுக்காக உயிரை இழந்த தியாகிகளால் கிடைத்த விடுதலையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஸ்ரீ வீர் சாவர்க்கரைப் பற்றி பலர் எதிர்மறையான கருத்துக்களை அரசியல் ஆதாயத்துக்காகப் பரப்புவதை நாம் காண்கிறோம்.அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இப்படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். காந்தியின் அஹிம்சா கொள்கைக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தவர். ஆங்கிலேய அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்தியவர். அதனாலேயே அந்தமான் சிறையில் இரண்டு முறை ஆயுள் தண்டனை பெற்றவர். சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளை எவ்வளவு எளிதாக மறைத்து அவர் மேல் சேற்றை வாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள் அற்ப பதர்கள்!

ஒரு தூய்மையான,சுதந்திர தாகம் கொண்ட மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது அத்தனை எளிதல்ல. விடுதலைப் போராட்டங்களையும் அவருடைய வாழ்க்கையையும் பிணைத்து அழகான படமாகக் கொண்டு வந்ததில் முழு வெற்றியடைந்திருக்கிறது திரைப்படக்குழு. 'காலா பாணி' சிறையில் அவர் படும் கொடுமைகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

'இந்துத்துவா' விற்கு அவர் அளிக்கும் விளக்கம் தான் உண்மையானது. அதை வழக்கம் போல திராவிட பாணியில் உருட்டி பொய்யைப் பரப்பி வருகிறது தீராவிடம். படத்தைப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும். அதை விட, அவரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டால் அற்பர்களின் பொய் அம்பலமாகும். 

இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மாணவர்கள் கண்டிப்பாக.

No comments:

Post a Comment

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

சொல்வனம் இதழ் 353ல் வெளிவந்த கட்டுரை  இராணுவ உடையில் ஒரு கூலிப்படை – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026 ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தா...