Thursday, February 3, 2022

தம்பி - கௌதம சித்தார்த்தன்

சிறு குழந்தைகள் பலரும் தங்களுக்கான உலகத்தை சிருஷ்டிக்கொண்டு ஆனந்தமாக இருப்பார்கள். பெற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்களில் தாங்களும் கதாபாத்திரமாக உலவுவார்கள். அப்படித்தான் இக்கதையில் வரும் ஆத்மா எனும் சிறுவனும். தம்பி எனும் ஒரு உருவத்தைத் தன்னுலகில் படைத்துக் கொண்டு வாழ்கிறான். பெரியவர்களுக்கு அவன் ஒரு மனம் பிறழ்ந்த குழந்தையாக தெரிகிறது. அவனுடைய உலகில் ஆனந்தமாக தன்னுடைய தம்பியுடன் இருந்தவன் அப்பா போடும்  இறுதி நாடகத்தில் சுய நினைவுக்கு வருகிறான்.  சிறு குழந்தைகள் கையில் சதா ஒரு பொம்மையுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இங்கே பெண் குழந்தைகள் பொம்மையை வைத்து பேசி சிரிப்பதும், தலை வாரி விடுவதுமாய் இருப்பார்கள். 

மகள் அப்படித்தான் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள், நண்பர்களிடையே நடந்த சண்டைகள், அம்மா, அப்பாவிடம் பேச தயங்கும் விஷயங்கள் கூட அங்கே பேச்சாயிருக்கும். அவர்களின் தனிமையைப் போக்கிக் கொள்ள அம்மா/அப்பா/நண்பர்கள் என துணை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உலகில் நிகழும் காட்சி இது. குழந்தைகள் தனித்து விடப்படும் பொழுது ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் இப்படியொரு கதாபாத்திரத்தைப் படைத்துப் பொழுதைப் போக்குவார்கள். 

பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை விட படிக்க ஏராளமான பாடங்கள் வெளியுலகில் இருக்கிறது என்பதையும் ஆசிரியர் போகிற போக்கில் சொல்வதில் தான் எத்தனை உண்மை என்பது வளர்ந்தவர்களுக்குத் தெரியும்.

ஒரு அப்பாவின் மனப்போராட்டமும், கருவை இழந்த அம்மாவின் எதிர்வினையும்  அச்சிறுவனின் எதிர்பார்ப்பின் ஏமாற்றமும் அதனைத் தொடர்ந்து வாழும் வேறொரு உலகமும் என உளவியல் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் கதை 'தம்பி'. 

தம்பி - கௌதம சித்தார்த்தன்


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...