Friday, March 25, 2022

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இது வரையிலும் இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல கதை, கதாநாயக, நாயகிகள், பாடல்கள், வசனங்கள், காட்சிஅமைப்புகள் என்று பல காரணிகள் இருந்திருக்கிறது. முதல் முறையாக ஒரு வரலாற்றுப் பிழையை, அரசாங்கத்தின் அரஜாகப்போக்கை, ஒரு இனத்தை முற்றிலுமாக அவர்கள் இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நடந்த இனப்படுகொலையை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் படம் மட்டுமன்றி உண்மையை உலகுக்கும் உரைத்துச் சொன்ன, மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்". இந்தப் படத்தைத் துணிச்சலுடன் எடுத்ததற்காகவே திரு.விவேக் அக்னிஹோத்ரி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

தங்களை அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு வெறிபிடித்துத் திரியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஈனமற்ற கொலைகளும் படுபாதக செயல்களும் இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட.

என்றோ நடந்த அக்கிரமங்கள் அல்ல. நான் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அரங்கேறியிருக்கிறது இந்தக் கொடூரம்😑 இலங்கையில் தமிழர் போராட்டங்கள், டெல்லியில் சீக்கியர் கலவரம், பாபர் மசூதி இடிப்பு விவகாரம் என்று பல விஷயங்களைத் திரித்து மக்களை உணர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஊடகங்கள் தான் இந்த இனப்படுகொலையை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் நம்மிடையே மறைத்திருக்கிறது. இதற்கான முழுப்பொறுப்பும் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸும், அவர்களுக்கு ஒத்து ஊதின ஊடகங்களும், தீவிரவாதத்திற்குத் துணை சென்ற நடுநிலைப்போராளி வேஷம் கட்டிய அனைத்துக் கயவர்களும் தான்.

இந்தியா சுதந்திரம் பெற்றாலும் காஷ்மீர் என்ற தலைவலியை விட்டு விட்டுச் சென்றது இந்தியாவைக் கொள்ளை அடித்த பிரிட்டிஷ் அரசு. ஜவஹர்லால் நேரு எரிகிற கொள்ளியில் மேலும் எண்ணையைச் சேர்த்து இத்தகைய படுப்பாதகச் செயலுக்கு அடிக்கல் நாட்டியது தான் இன்றைய காஷ்மீர் பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானது.

இப்படத்தைப் பார்க்க வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அருகருகே நண்பர்கள் போல காலம்காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழ்ந்த பூமி தான் காஷ்மீர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வளர்த்து விட்டு வேடிக்கைப் பார்த்த காங்கிரஸ், இந்துக்களைக் காக்க மறந்து தீவிரவாதிகளுக்குத் துணை சென்றதைத் தான் இந்தப்படம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்துப்பெண்களை விட்டு விட்டு ஆண்களை மட்டும் வெளியேறச் சொல்வதும், மதம் மாறாதவர்களைச் சுட்டுக் கொல்வதும் என இந்துக்களின் நிலம், பெண்களைச் சூறையாடிய கயவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் தானே தோலுரித்துக் காட்டியுள்ளது இப்படம்? இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு என்று யோசிக்க வேண்டும். 

இதன் இயக்குனர் இப்படத்தைப் பற்றின தகவல்களை ட்விட்டர்-ல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் தீவிரவாதக் குழுக்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், படம் வெளிவராமல் இருக்க ஏற்பட்ட தடைகளையும் மீறி இந்தப் படம் வெளிவந்திருக்கிறது என்றால் அதற்கான சாத்தியம் மத்தியில் ஆளும் பாஜகாவால் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை காஷ்மீர் இந்துக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இப்படத்தின் முகத்திலறையும் உண்மை, மனச்சாட்சியுடன் உள்ளவர்கள் அனைவரையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது.

மற்ற படங்களைப் போல் இதுவும் ஒரு திரைப்படம் என்று கடந்து போக முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவளித்த காஷ்மீர் முஸ்லீம்கள் சிலர் கூட இறந்திருக்கலாம். ஒரு இனப்படுகொலையை மக்களிடமிருந்து மறைத்த காங்கிரஸ் களவாணிகள் கூட்டம், நியாயப்படுத்தும் கம்யூனிச, நடுநிலைக் கூலிகளின் இந்திய எதிர்ப்புத் தீவிரவாதம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் மாநில கட்சிகள் மத்திய அரசிற்கு எதிராக தங்கள் அரசியல் லாபத்திற்காக உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயம் பாரட்டப் படவேண்டிய ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியாவிற்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக நடந்த, நடக்கும் அரஜாகங்களை மக்கள் உணர வேண்டும்.

அன்று காஷ்மீரில் நடந்த காட்சிகளைத் திரையில் கண்ட பலர் அதிர்ச்சியில் உறைந்து போனதும் அழுததும் இந்த வரலாற்றுப் பிழையை அறியாததற்காக வெட்கமும் வேதனையுடனும் படத்தைப் பார்த்து விட்டு வந்தோம்.

இன்று, இந்தப் படம் ஏன் என்று பல நடுநிலைகள் கேட்கிறார்கள்? வரலாற்றை அறிந்து கொள்ள ஏன் மறுக்கிறர்கள்? தவறு செய்த தீவிரவாதம் தன்னைத் திருத்திக் கொள்ளுமா? 30 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? அதற்காகத்தானே திரு.வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்டிக்கிள் 370ஐ நீக்கியுள்ளது தற்போதைய இந்திய அரசு. இனியாவது காஷ்மீர் இந்துக்களுக்கு நீதி கிடைக்கட்டும்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை உலகிற்கு உணர்த்திய படம் "ஹோட்டல் ருவாண்டா" . இந்தியாவில் நடந்த இன ஒழிப்பே தெரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவில் நடந்தது மட்டும் எப்படி தெரிந்திருக்கும்? அவ்வளவு ஏன். 1940களில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய இனப்படுகொலை உலகம் அறிந்ததே. அதற்காக அவர்கள் அதை மறந்து சென்று கொண்டிருக்கிறார்களா? இன்று வரையில் எத்தனை ஹாலிவுட் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதற்காக எடுக்கிறார்கள்? உலகமும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்று தானே? ஜெர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்த யூதர்களைப் பற்றின அருங்காட்சியகம் ஒன்று பெர்லின் நகரில் உள்ளது. அவர்களுக்கு நடந்த இனப்படுகொலை காட்சிகள் ஒவ்வொன்றையும் புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆவண திரைப்படமும் காண கிடைக்கிறது. உள்ளே சென்றால் சூழ்ந்திருக்கும் அமைதியும் வெறுமையும் அந்த மக்கள் அனுபவித்த துன்பங்கள் ரணமாக பலரும் கண்ணீருடன் தான் வெளியில் வருகிறார்கள். அப்படியான ஒரு தாக்கத்தைத் தான் " தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படமும் செய்திருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? இந்தப் படத்தை வெளியிட திரையரங்குகள் பலவும் மறுத்திருக்கிறது. படத்தைப் படமாக பாருங்கள் என்று கூவும் கூலிகளும் எதிர்க்கிறார்கள். பதைபதைக்கிறார்கள்.

யூதர்களைப் போலவே காஷ்மீர் பண்டிட்களும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரையில் அதற்காக துப்பாக்கி தூக்கிக் கொண்டு யாரையும் பழி தீர்க்கவோ பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று புலம்பி அனுதாபத்தையோ தேடிக் கொள்ளவில்லை. அவர்கள் நிலம் அவர்களுக்கே. அதைத்தான் மோடி அரசு செய்ய முனைந்திருக்கிறது. இதை எதிர்க்கிறவர்கள் தான் இந்தப் படத்தின் முகத்திலறையும் உண்மையை எதிர்க்கிறார்கள். எங்கே மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

இத்தனை அட்டூழியங்களையும் கொலைகளையும் செய்த காட்டுமிராண்டிகள் இன்று வரை பகிரங்க மன்னிப்போ தங்கள் தவறுகளை உணர்ந்ததாகவோ தெரியவில்லை.

இன்றும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து தான் வாழ்கிறோம். ஆனால் தங்களுக்கென ஒரு சட்டம், எல்லைகளை வகுத்துக் கொண்டு மதம் என்று வந்தால் எப்படி மதம் பிடித்துத் திரிவார்கள் அமைதி மார்க்கத்தினர் என்ற உண்மையை இனியாவது புரிந்து கொள்வார்களா இந்த நடுநிலை வேஷம் போடுபவர்கள்?

இவற்றையெல்லாம் மீறி மக்களின் பேராதரவால் வெற்றி பெற்றிருக்கிறது இப்படம். காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையில் இனிமேலாவது வசந்தம் வீசட்டும்.















No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...