Monday, March 14, 2022

The Bombardment


போர்க்காலங்களில் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். அதிலும் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் என்பதை உலகப்போர்கள் தொடங்கி நேற்றைய ஸ்ரீலங்கா முதல் இன்றைய உக்ரைன் போர் வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். "The Bombardment" திரைப்படம் உலகப்போரின் போது நடந்த ஒரு அசம்பாவிதத்தால் பள்ளியில் குண்டு போடப்பட்டு குழந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் இறந்த நிகழ்வைப் பற்றின உண்மைச்சம்பவம்.

ஒரு தவறுதலான குண்டு வீச்சில் மூன்று இளம்பெண்களும் வண்டியோட்டியும் பலியாகிறதில் ஆரம்பமாகிறது படம். அதனைப் பார்த்து அதிர்ச்சியாகும் சிறுவன் ஒருவன் பட இறுதியில் அதன் பாதிப்பிலிருந்து வெளிவருவது போல அமைத்திருந்தார்கள். குதூகலமாக பள்ளிச் செல்லும் குழந்தைகள், அந்த வயதில் இருக்கும் கற்பனைக்கதைகள், பேச்சும் ஆட்டமும் என்று கோபென்ஹெகென் நகரில் நடக்கிறது விரிகிறது படக்காட்சிகள். 

ஹிட்லரின் ஆட்சியில் இருக்கும் சுவீடனை மீட்க பிரிட்டிஷ் அரசாங்கம் குண்டுகள் வீசி ஹிட்லரின் அதிகாரிகளைக் கொல்ல  திட்டம் தீட்டுகிறார்கள். பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவர் யூதர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் ஏன் இத்தனை துன்பப்பட வேண்டும் என்று யேசுவிடம் கேட்க தன்னைத்தானே வருத்திக் கொள்கிறாள். ஒரு ஹிட்லர் ஆதரவாளனை மனம் திருத்துகிறாள். இப்படித்தான் போகிறது கதை.

முதலில் இந்தப்படத்தை அதன் கதை தொடர்பான காலத்தோடு அழகாக எடுத்திருந்தார்கள். போர் என்று வரும் பொழுது மனிதம் தொலைந்து போகும் என்பதை சில காட்சிகள் தெளிவாகச் சொல்கிறது. இன்றைய போர் சூழ் உலகில் ஒருவரை ஒருவர் ஆள வேண்டும் என்ற வெறியில் மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறது இத்தகைய படங்கள்.

யூதர்களைப் பற்றின தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே நன்கு பரப்பி இருந்திருக்கிறது கொடுங்கோலன் ஹிட்லர் அரசாங்கம். மக்களும் அதை நம்பியிருந்திருக்கிறர்கள்.  சமூக வலைதள காலத்திலேயே எத்தனை தில்லாலங்கடி வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது! கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தையும் எப்படியெல்லாம் மடை திருப்புகிறார்கள் கேவலமான அரசியல்வாதிகள்? சமீபத்தில் வெளிவந்திருக்கும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தின் விமரிசனங்களும் அதைத்தான் சொல்கின்றது.

மனிதத்துடன் வாழ்வது அத்தனை கடினமா?

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...