Monday, March 28, 2022

பவன்கிந்த் (Pawankhind)

மீண்டுமொரு அருமையான மராத்திப் படம் 'பவன்கிந்த்'. மராத்திய மன்னன் சிவாஜி, அவருடைய தாயார் ஜிஜாபாய் எத்தகைய வீர மகனை வளர்த்து இஸ்லாமிய கொடூரன்களை எதிர்த்துப் போராட வைத்திருக்கிறார் என்று வரலாற்றில் நாம் சிறிது படித்திருக்கிறோம். பாரத நாட்டில் பிறந்து நாட்டை  நேசிக்கும் அனைவருக்கும் வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்றுமே உத்வேகத்தை அளிக்கவல்லது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க அவருடன் துணை நின்ற படைத்தளபதிகள், வீரர்கள்  அவர்களுடைய தியாகங்களை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்தப் படம். 

1660களில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் நகருக்கு அருகில், விஷால்காட் கோட்டைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் மராட்டிய வீரர் பாஜி பிரபு தேஷ்பாண்டே, சம்பு சிங் ஜாதவ் மற்றும் சித்தி மசூத் ஆகியோருக்கு இடையே நடந்த போரில்  சிவாஜியை பாதுகாப்பாக வேறிடத்திற்கு அழைத்துச் செல்ல நடக்கும் யுத்தம், அதில் உயிரிழந்த வீரர்கள் பற்றின சம்பவத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 300 மராட்டிய வீரர்களுடன் மராட்டிய படைத்தளபதி பாஜி பிரபு தேஷ்பாண்டே,  12,000 பேரைக் கொண்ட சுல்தானின் படைத் தளபதி சித்தி மசூத்துடன் வீரத்துடன் போராடி  சிவாஜியையும் அவருடன் துணை சென்றவர்களையும் காக்க தன்னுயிர் இழக்கிறார்கள். பல மாந்தர்கள், குடும்பங்கள் செய்த தியாகம் தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பதை எக்காலத்திலும் மறக்க கூடாது என்று சிவாஜி அவர் மகனுக்கு படததில் எடுத்துரைப்பது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

மகன் எதிரிகளைப் பந்தாட, தாய்  ஜிஜாபாய் கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு கவலையுடன் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் நன்றியுடனும் கலந்து பேசி உரையாடுவதும் எதிரிகளை போர்முனையில் சந்திக்க ஆயத்தமாக இருக்கும் வீரப்பெண்மணியாக எப்படியெல்லாம் ஆங்கிலேயர், இஸ்லாமியர்களிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றியுள்ளார்கள் என்பது இந்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. 

படத்தின் பொருத்தமான கதை மாந்தர்கள், அவர்களின் மிகைப்படுத்தாத நடிப்பு, காட்சிகளோடு ஒன்றும் பாடல்கள், இறைபக்தி, போர் தாக்குதல்கள்  என்று அன்றைய ஹிந்து அரசர்களின் வாழ்வை அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை. 

பல உயிர்கள் தியாகம் செய்து தான் நம் நாட்டின் சுதந்திரமும் ஆங்கிலேய, இஸ்லாயமியர்களின் கொடூர ஆட்சியிலிருந்து தப்பிக்கவும் முடிந்திருக்கிறது. அதையெல்லாம் அறியாத சமூகம் ஒன்று வளர்ந்து வருவது மிக ஆபத்தானது. உண்மையான வரலாற்றை மறைத்து பொய்யைத் திணிக்கும் அரசு அமைப்புகளை எதிர்த்து இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் கர்மவீரர்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அமேசான் ப்ரைம்-ல் கண்டுகளிக்கலாம்.




No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...