பொருளாதார அமைதியின்மை, புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மனச்சோர்வு, பதட்டம், அதிர்ச்சி, ஏமாற்றம், தனிமை என பல்வேறு காரணிகளால்
அமெரிக்காவில் மட்டும் 5 பெரியவர்களில் ஒருவர் மன
"மனநலம்
இது சமீபத்திய நவீன போக்கா? இல்லை. 1949-ஆம் ஆண்டு, 'Mental Health America' எனும் அமைப்பால் தொடங்கப்பட்டது. மனநல கோளாறுகள், மன அழுத்தங்களைப் பற்றிய பொது அறிவு, சிகிச்சையின் மேன்மைகள், உதவிக்கான அணுகல்களை மக்களிடையே பேசி “மனநலம் என்பது உடல்நலத்தின் ஒரு அங்கம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கமாக தற்பொழுது மாறியுள்ளது.
உறவுகள், வேலைத்திறன், உடல் ஆரோக்கியம், வாழ்க்கைத் தேர்வுகள் இவை அனைத்தும் மனநலத்துடன் நேரடியாக இணைந்துள்ளதால் விழிப்புணர்வு அவசியமாகிறது.
பெரியவர்கள் மட்டுமன்றி இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். சமூக ஊடக அழுத்தம், எதிர்பார்ப்புகள், அடையாள தேடல்கள்
மன அழுத்தத்துடன் இருப்பவர்கள் உதவி கேட்க அஞ்சுகிறார்கள். இந்த மாதம் அவர்களுக்கான மாதம். "நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கான இடம் இந்த உலகில் இருக்கிறது" என்று கூறி ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் அணுகி ஆதரவை வழங்குவதே இதன் நோக்கம். வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், பள்ளிகள், வேலை இடங்களில் மனநல ஆதரவு பற்றிய தகவல்களைப் பகிர்வதும் “மன உளைச்சலால்
துயர் உணர்வுகள், ஓய்வு, உடற்பயிற்சி, தூக்கம் இவை அனைத்தும் மனநல பராமரிப்பில் முக்கியமானவை. தற்பொழுது பிரபலங்கள் பலரும் தாங்கள் மன நல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதை/ கொண்டதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருவதும் நல்ல தொடக்கம். சாமானியர்களுக்கு இருக்கும் அச்சமும் மெல்ல விலகி வருகிறது.
இந்த விழிப்புணர்வின் பலம் மனநலம் என்பது ஒவ்வொருவருக்கும் உரியது. நம் அன்றாட வாழ்வின் அடிப்படை. பற்களைத் துலக்குவது போலவே மனம் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். சமூகத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் மன
இந்த விழிப்புணர்வு மாதம் அமெரிக்காவில் துவங்கினாலும், மனநலம் என்பது உலகளாவிய பிரச்சினையாகும். ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலை வீதங்கள், போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்புகள் என்று உலகளவில் இதன் தேவை அதிகரித்துள்ளது. "மனநலம் இல்லை என்றால் சுகாதாரம் இல்லை" என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மனிதம் தழைக்க, மன நலத்தின் அவசியத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதே நம் கடமையாகும். அதற்கு உறுதுணையாக நம்மால் இயன்ற அளவில் அவர்களுக்கு அனுசரணையாக இருந்து வழிநடத்துவோம்.
No comments:
Post a Comment