Wednesday, June 20, 2018

அக்கா Vs தம்பி

சென்ற வார நீயா நானாவில் அக்கா Vs தம்பி உறவைப் பற்றின விவாதம். பல தம்பிகளும் திருமணமாகி அக்கா சென்று விட்ட வீடு வெறுமையாகி விட்டது. தனிமையாக உணர்கிறோம். தன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட உறவு தனக்காக பெற்றோரிடம் வாதிடும் அன்பான அக்கா என்று உருக...அக்காக்கள் அம்மாவின் இடத்தில் இருந்து தம்பிகளை கண்காணிப்பதும் நல்லது கெட்டது எடுத்துச் சொல்வதும் தம்பிகளின் திருமணத்திற்குப் பின்னும் தங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்ற அதிக எதிர்பார்ப்புகளுடன். அவரவர் குடும்பம் என்றான பின் அக்காக்கள் கொஞ்சம் ஒதுங்கி இருப்பதே நல்லது. வருகிற மகாராணிகள் பலரும் எளிதாக நாத்தனார்களை முழுங்கி ஏப்பம் விடுவதில் கில்லாடிகள்!

தாலி கழுத்தில் ஏறிய அடுத்த நொடியே என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று பாடி அவனை அவன் குடுபத்திலிருந்து பிரிப்பதிலேயே நவீன பெண்கள் பலரும் குறியாக இருக்கிறார்கள். தனக்கு மட்டுமே , தன் குழந்தைகளுக்கு மட்டுமே செலவுகள் செய்ய வேண்டும். கணவனின் உடன்பிறந்தவர்கள், அம்மா, அப்பாவிற்காக ஒரு ரூபா செலவு செய்தால் கூட பத்ரகாளியாகி விடுகிறார்கள்.

நாத்தனார் மேல் உண்மையாக பாசம் கொண்டிருக்கும் சில அபூர்வ பெண்களும், இருப்பது போல் பாசாங்கு செய்யும் பலரும் இருக்கிறார்கள் தான்! பாவம் நம் தம்பி. பெண்டாட்டி சொல்பேச்சு கேட்க வேண்டிய நிலைமை. அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் அக்காக்கள் தான் பலரும்! நீ எதற்கு அவளுக்கு அடிபணிய வேண்டும். நீ ஆண்பிள்ளை என்று தூபம் போட்டு குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கும் சில அக்காக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அக்கா தம்பி உறவு என்பது அக்கா திருமணமாகி செல்வது வரை மட்டுமா? இல்லை தம்பிக்கு திருமணம் நடக்கும் வரை தானா? அவரவர் குடும்பம் என்றான பின் முன்பு போல் அந்த பந்தம் தொடர்வது கடினம் தானோ?


🤔🤔🤔

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...