Tuesday, August 9, 2022

சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்


திரு.ஜெயமோகனின் தளத்தில் எதையோ தேடப் போய் எதுவோ ஒன்று கிடைத்தது. ஆம். திண்டுக்கல்லில் இருந்து சௌராஷ்ட்ர வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.  

//

"நானறிந்தவரை சௌராஷ்டிரர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வாழ்க்கைச்சூழல் சார்ந்து சௌராஷ்டிரர் முழு வரலாறு என்னும் நூல் உள்ளது. ஆசிரியர் கே. ஆர்., சேதுராமன், மதுரை. முக்கியமான புனைவு என ஏதுமில்லை. எம்.வி.வெங்கட்ராமின் வேள்விதீ நாவலில் உள்ளது மேலோட்டமான ஒரு சித்திரம் மட்டும்தான்.

சௌராஷ்டிரர்களின் பூர்வ வரலாறு என ஒரு சிறு நூலை லண்டன் சுவாமிநாதன் என்னும் ஆய்வாளர் லண்டன் அருங்கட்சியக நூலத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்."

//

"சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்" எனும் நூலைப் பற்றி குறிப்பிட்டும் சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

 இரண்டணாவிற்கு 1911ல் விற்கப்பட்டிருக்கிற இந்நூலில் எம்முன்னோர்கள் பற்றின தகவல்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  


"சௌராஷ்ட்ரர்கள் என்கிற பதத்துக்கு செழிப்பான ராஜ்ஜியத்தில் வசிப்பவர்கள் என்று அர்த்தம். அவர்கள் இந்து மதத்தவர்கள். ஆதியில் மத்துவர்கள். தென்னிந்தியாவில் குடியேறிய பிறகு சிலர் சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் இவர்களுடைய பிரசாங்கங்களைக் கேட்டு ஸ்மார்த்தர்களாயும் வைஷ்ணவர்களாயும் மாறி விட்டார்கள்😮😯😲

https://www.jeyamohan.in/168238/

சௌராஷ்டிரர்-வரலாறு



No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...