Monday, August 29, 2022

மரமே மரமே

ராபர்ட் ஃபிராஸ்ட் நினைவு இல்லத்திற்குச் சென்று வந்த பிறகு அவரது கவிதைகளை அறிந்து கொள்ளும் எளிய முயற்சி.

Tree At My Window

Tree at my window, window tree,
My sash is lowered when night comes on;
But let there never be curtain drawn
Between you and me.

Vague dream head lifted out of the ground,
And thing next most diffuse to cloud,
Not all your light tongues talking aloud
Could be profound.

But tree, I have seen you taken and tossed,
And if you have seen me when I slept,
You have seen me when I was taken and swept
And all but lost.

That day she put our heads together,
Fate had her imagination about her,
Your head so much concerned with outer,
Mine with inner, weather.


- Robert Frost

ஒரு குழந்தையின் மனநிலையில் ஆரம்பித்து தத்துவார்த்தமாக முடிகிறது இந்த ஜன்னலோர மரத்தைப் பற்றின அழகிய கவிதை. பனிக்காலத்தில் இலைகளைத் துறந்து மொட்டையாக கறுத்து நிற்கும் மரங்கள் பனி கொட்டும் நாளில் வெண்பனியுடனும் ஐஸ்மழை பொழியும் நாட்களில் கிளைகள் எடை தாங்காது வளைந்தும் நிற்கும். பெருங்காற்றில் பூமிக்கும் அதற்குமான பல கால பந்தம் அறுந்து வேரோடு சாய்ந்து விடும் அபாயங்களும் உண்டு. மழைக்காலத்தில் துளிர்த்து, வெயில்காலத்தில் குளுமையைத் தந்து தென்றல் வீசிடும் நாட்களில் அழகாய் தலையசைத்து இலையுதிர்காலத்தில் வண்ண வண்ண இலைகளுடன் என்று ஒவ்வொரு பருவத்திலும் வலம் வரும் மரங்கள் அனைத்தும் பல புறக்காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாவதைப் போல் தானும் உள்மனக் காரணிகளால் கவலை கொள்வதாகச் சொல்லி முடித்ததில் மனங்கவருகிறது இந்தக் கவிதை.

ராபர்ட் ஃபிராஸ்ட் வீட்டைச் சுற்றி பெரிய பெரிய மரங்கள் இருந்தது. அவர் குறிப்பிடும் ஜன்னல் வழியே தெரிந்த மரம் தான் இந்த கவிதையின் ஆதாரம் போலும்!

மரங்கள் சூழ் மாடி வீடுகளில் கண் விழித்தவுடன் முதலில் தெரிவது ஜன்னல் அருகே அசைந்தாடும் மரமாகத் தான் இருக்கும். எத்தனை பேர் அதனை ரசிப்பார்கள் என்பது வேறு விஷயம். காலையில் எழும்பொழுதே அந்த நாள் எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையுடன் தான் பலருக்கும் விடியும். வேலைகளை முடித்து விட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாய மனக்கவலை அம்மாக்காளுக்கு. படிக்கச் செல்ல வேண்டுமே என்று குளிர் காலையில் எழுந்திருக்க மனமின்றி எழும் பிள்ளைகள், அன்றைய அலுவலை நினைத்து என்று அவரவர்க்கு அவரவர் கவலை. இதில் மரம் ஜன்னலில் எட்டிப்பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?

ஜன்னலில் எட்டிப்பார்க்கும் மரத்துடனான பொழுதுகள் இனிமையானவை. ரசிக்கத்தகுந்தவை. குழந்தையின் மனநிலையில் தான் "ஜன்னல் மரம்" என்று பெயரிட்டுப் பேசிட முடியும்! என்ன? குழந்தை மனம் தான் வேண்டும். அதைத்தான் இன்று இழந்து கொண்டிருக்கிறோம்😞😔😢



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...