Sunday, May 17, 2020

உலக புத்தக தினம்

புத்தகம் பையிலே படிப்பதோ கதையிலே...

அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா குழந்தைகள் புத்தகங்களில் ஆரம்பமாகியது புத்தக வாசிப்பு. எப்படா வரும் என்று காத்திருந்து ஒரு வரி விடாமல் படக்கதை, ஒரு பக்க கதை, மாயாவி, ராஜா கதை, பாலு கரடி, டிங்கு, ஆறு வித்தியாசங்கள் ... என்று சிரிக்க, சிந்திக்க...

நடுநிலைப்பள்ளி வயதில் புதன், வியாழன், வெள்ளி இதயம், விகடன், குமுதம் கல்கண்டு என்று மாடிப்படிகளில் நகம் கடித்த்துக் கொண்டே தொடர்கதைகளையும், பயணக்கட்டுரைகளையும், லேனா தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்...அறிந்து கொள்ள , சினிமா விமரிசனங்கள், கிசுகிசுக்கள் ஒன்று விடாமல் படித்து அறிவை வளர்த்துக் கொண்டதெல்லாம்

மேல்நிலைப்பள்ளி வயதில் எதிர்வீட்டு அக்காக்களிடமிருந்து கதைப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்து அடிவாங்கி, பள்ளி நூலகத்தில் புத்தகங்களை எடுத்து வீட்டுக்குத் தெரியாமல் படித்ததெல்லாம்...

கல்லூரி முடித்ததும் வேலையிடத்தில் கொட்டிக்கிடந்தது அத்தனை புத்தகங்கள்!

என்னைத் தொலைத்துக் கொள்ள, நான் தொலைந்து போக அப்போதைய தேவையாக இருந்தது கையில் ஒரே ஒரு புத்தகம்.

இன்று தூங்குவதற்கு முன் தூக்க மாத்திரையாகவும்ம்ம்ம் ...

கையிலேந்தி
மடியில்வைத்து
படுத்துக்கொண்டு
அமர்ந்து
நின்று
படிப்பதில் இருக்கும் சுகத்தை தரவல்லது புத்தகங்களே 🙂

No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...