Sunday, May 17, 2020

உலக குடும்ப தினம்


புளியைக் கரைத்து புளிக்காய்ச்சல் செய்யும் பொழுதே வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்தயப்பவுடர், மஞ்சள் பவுடர், பெருங்காயத்தூள், சிறிது இஞ்சி சேர்க்க காற்றில் மணம் வீச, நாக்கும் ஏங்க ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த வத்தல்கள் புளிக்கரைசலில் நாட்டியமாட, மணம் சேர்க்கும் கருவேப்பிலையும்.

அதற்குள் உதிரி உதிரியாய் வெந்த சோறும் வடிக்கத் தயாராகி விட, பொங்கல் தட்டில் ஆற விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வத்தல், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி புளிக்காய்ச்சலைச் சேர்த்து அம்மா பிசைய, உப்பு சரிபார்க்க தட்டைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு கைப்பிடி உருண்டை.... ம்ம்ம்... காரமா புளிப்பா ... யம் யம் யம்... அம்பட்பாத்💕

கூடவே வேக வைத்த
தட்டைப்பயறு
கருப்பு சுண்டல்

தேங்காயும் கொழிஞ்சியும் கொசுறு❤️

இனிப்பாக
சேமியா கேசரி
ரொட்டி ஹல்வா

இப்படி குடும்பமாக பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்களுடன் உண்டு மகிழ்ந்ததொரு காலம் இனி வாரா. மகிழ்ந்திருந்த பொழுதுகள் மட்டுமே நினைவினில் என்றென்றும்ம்ம்ம்💕💕💕

குடும்ப உறவுகள் வாழ்வை வளமாக்கும் அற்புத படைப்புகள். உணர்ந்து கொண்டாடுவோம். உள மகிழ்வோம்.

அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துகள்🙌


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...