Sunday, May 17, 2020

"தொவ்ளோ"


மழை வந்தாலே கூடவே அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொள்ளும் இருமல், சளி, காய்ச்சல். அப்பொழுதெல்லாம் வீட்டில் இரவு உணவாக "தொவ்ளோ" எனும் அரிசி மாவுக்கொழுக்கட்டை செய்வார் அம்மா. சௌராஷ்ட்ரா மக்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் இரவு உணவு. ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உருட்டி சிறு சிறு உருண்டைகளாக்கி விரலால் ஒரு அழுத்து அழுத்தி பொங்கல் தட்டு அல்லது சுடகில் வரிசையாக வைக்க வேண்டும்.

உலையில் வைத்த பாத்திரத்தில் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் இந்த கொழுக்கட்டைகளைப் போட்டு வேகும் வரை பொறுமை காக்க வேண்டும். வெந்ததும் வடிகட்டி விட்டு, நெய் அல்லது எண்ணெயில் சீரகம், மிளகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அதை கொழுக்கட்டையில் சேர்த்து கலந்து சுடச்சுட சாப்பிட்டால் ...செத்துப் போயிருந்த நாக்கின் சுவை நாளங்கள் நர்த்தனமிடும். அப்படியே வடிகட்டிய கஞ்சியையும் கொஞ்சம் குடித்தால்...தொண்டைக்கு இதமாக நெஞ்சுக்கு சுகமாக நாக்கிற்கு சுவையாக... ம்ம்ம்ம்ம்...


இது போதும் எனக்கு இது போதுமே.... வேறென்ன வேண்டும் இது மட்டுமேன்னு பாடலாம்.

இட்லிப்பொடி தொட்டுச் சாப்பிட காரமும் சேர்ந்து திவ்யமாக இருக்கும்.



அசைவ கொழுக்கட்டையும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான். அதில் ஆட்டுக்கால் சேர்த்து பெரிய சைஸ் கொழுக்கட்டையுடன் வேகவைத்த சூப்...ம்ம்ம்... டம்ப்ளிங்லாம் பிச்சை எடுக்கணும்.

படங்கள்: இணைய உபயம். சௌராஷ்ட்ரா சமையல்கூடத்திலிருந்து (ஃபேஸ்புக்) முன்னொரு நாளில் சுட்டது.பூர்ணிமான்னு நினைக்கிறேன். நன்றி.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...