Thursday, January 6, 2022

மாதங்களில் அவள் மார்கழி 24


"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என துவங்கும் இருபத்திநான்காவது பாடலில் கண்ணனின் அவதாரங்களையும்,  வீர, தீரச் செயல்களையும் பாராட்டி வந்தனம் செய்து தங்கள் மீதும் சிறிது இரக்கம் காட்டி அவனைப் போற்றிப்பாட அருள்பாலிக்க வேண்டுகிறார்கள் ஆயர்குலப் பெண்கள். வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் இவ்வுலகை அளந்து மஹாபலி எனும் அரக்கனிடம் இருந்து இவ்வுலகைக் காத்தவன். சீதையை மீட்க தென்னிலங்கைச் சென்று ராவணனை வெற்றி கொண்டவன். சக்கர வடிவில் வந்த வத்ஸாசுரனை விளா மர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எரிந்து அழித்தவன். பகைவர் எவ்வளவு பலவான்களாயினும் வேலால் அழித்தவன். அவனின் திருவடிகளுக்கு, வீரத்திற்கு, வேலாயுதத்துக்கு நமஸ்காரம் என்று நாச்சியார் எடுத்துரைக்கும் விதம் அழகு.


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...