Monday, January 24, 2022

உள்ளங்கையில் அடிமை உலகம்

நம் வாழ்க்கை இன்று ஒரு கைபேசியில் அடங்கியிருக்கிறது என்று உணர்ந்தாலும் பலரும் ஒத்துக் கொள்ளாத விஷயம். பனிக்காலத்தில் மைனஸ் டிகிரி குளிரில் பல நேரங்களில் ஆப்பிள் ஃபோன் கூட உறைந்து போய் விடுகிறது. அப்படித்தான் நேற்று 'வெஸ்ட் மெடோ பீச்' கடற்கரையில் மாலை நேர சூரியனின் அழகையும் குளிர்காற்றில் கரையோரம் சிறிது தூரம் நடந்து சென்ற வந்த சில நிமிடத்திற்குள் கணவரின் கைபேசி சார்ஜ் குறைந்து விட்டது. சரி வண்டிக்குத் திரும்பி விடலாம் என்று காரில் ஏறியவுடன் மீண்டும் கைபேசியை உயிர்ப்பிக்க அது சண்டித்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. எத்தனை முறை கடவுச்சொல்லை தட்டினாலும் அது உள்ளே செல்ல மட்டும் அனுமதி மறுத்துக் கொண்டே இருந்தது. பாவம் ஈஷ்வர்! படு டென்ஷானாகி விட்டார். அவருடைய அலுவல் விஷயங்களில் இருந்து தின வாழ்க்கையின் அத்தனை விஷயங்களையும் அதில் தான் கையாண்டு கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் தொலைபேசி எண் கூட தெரியவில்லை. இரவு உறங்கி காலையில் கண்விழிக்க அலாரம் வைப்பதிலிருந்து அலுவலக மீட்டிங், சமூக வலைதளங்கள், செய்திகளை வாசிப்பது, படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது என சகலத்திற்கும் கையளவு சாதனத்தை நம்பியிருக்கிறோம். அது இல்லையென்றால் உலகமே தலைகீழான மாதிரி ஆகிவிடுகிறது.

ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் செய்வது என்பது மகா ஹிம்சையான விஷயம். ஆயிரத்தெட்டு கேள்விகள். நடைமுறைகள். அத்தனை எளிதில் முடிகிற காரியமல்ல. இப்படி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே அயர்ச்சியாக இருக்கிறது! இனியாவது எல்லாவற்றிற்கும் 'backup' எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டோம்.

சிறு ஃபோன் ஒன்று எப்படி நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது! 


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...