Wednesday, January 12, 2022

மாதங்களில் அவள் மார்கழி 29


மார்கழி மாதத்தில் நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள் பரந்தாமனிடம் வேண்டுவதெல்லாம் பொன்னும் பொருளும் அல்ல. ஏழு பிறவிகளிலும் தங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். தங்களை உறவினர்களாக ஏற்க வேண்டும். அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைத் தர வேண்டும். மற்ற ஆசைகளை அவனையே அழித்து விட வேண்டுகிறார்கள். இதுவல்லவோ பக்தி! இதைத்தான் ஆண்டாளும் இறைஞ்சுகிறாள் தன் பாடலின் மூலமாக! இன்று கோவிலுக்குச் செல்லும் பலரும் நமக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வேண்டித்தானே செல்கிறோம்? 

எந்த கஷ்டமான சூழலிலும் நமக்கு நன்மையையும், வெற்றியையும் தரக் கூடியதாக ராம மந்திரம் இருக்கிறது. இன்று வைகுண்ட ஏகாதசி. அந்த வைகுண்ட நாதனைப் பாடிச் சரணடைவோம். 

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே"

No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...