Monday, January 10, 2022

மாதங்களில் அவள் மார்கழி 27

 

 "கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!" என துவங்குகிறது இருப்பத்தியேழாவது பாடல். மார்கழி 27 ம் நாள் பெருமாள் கோவில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் 'கூடாரவல்லி விழா' கொண்டாடப்படும். அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் திரளாகக் கூடுவார்கள். நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல் போன்ற 'அக்கார அடிசில்'  உணவினைப் படைத்து வழிபாடு செய்வார்கள். விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அருட்செல்வத்துடன் பொருட்செல்வமும் வேண்டி விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பால்சோறு உண்ண வருமாறு கண்ணனை வேண்டுகிறார்கள்.

No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...