Saturday, December 25, 2021

மாதங்களில் அவள் மார்கழி 10

முப்பிறவியில் செய்த பலனைத் தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதைத்தான் ஆண்டாளும் தன் தோழியின் சுகமான வாழ்க்கைக்கு முப்பிறவியில் திருமாலை வணங்கி நோன்பிருந்ததன் பலனை அனுபவிக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறாள். நன்கு உறங்குபவர்களைப் பார்த்து கும்பகர்ணனைப் போல் தூங்குவதாக சொல்வது வழக்கம். ஆண்டாளும் இப்பாடலில் ஆழ்ந்து உறங்கும் தோழியைப் பார்த்து அவ்வாறே விளிப்பது அவளுடைய பாடல்கள் எத்தனை யதார்த்தமானது என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.


No comments:

Post a Comment

சர்வதேச மகளிர் தினம்

"பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது" என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது தான் சர்வதேச மகளிர் தின...